சென்னை,அக்.3- காலை உணவு திட்டம் மற்றும் புதுமைப் பெண் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பேருந்துகள் திங்களன்று (அக்.3) தொடங்கி வைக்கப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், செப்டம்பர் 15 அன்று தொடங்கி வைத்தார். இதேபோல், சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவி களுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் மூலம் மாதந் தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார். இந்நிலையில் இந்த திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு பேருந்துகள் திங்களன்று (அக்.3) தொடங்கி வைக்கப்பட்டது. சென்னை மாநகர் போக்குவரத்துக் கழ கத்தில் காலை உணவுத் திட்டம் மற்றும் புது மைப் பெண் திட்டம் தொடர்பாக விளம்ப ரங்கள் அடங்கிய விழிப்புணர்வு பேருந்தும் தொடங்கி வைக்கப்பட்டது.