பட்டியலின பழங்குடி மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்தும் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், ‘சாதிய ஒடுக்குமுறைகளை ஒழித்திடுவோம்! சாதியற்ற சமத்துவ சமூகம் படைத்திடுவோம்’ என்ற முழக்கத்தை முன்னிறுத்தியும் 16.5.2023 அன்று விழுப்புரத்தில் பட்டியலின பழங்குடி மக்கள் மாநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற உள்ளது. மாநாட்டையொட்டி தீக்கதிர் சிறப்பிதழ் ஒன்றை 14.5.2023 ஞாயிறன்று வெளியிடுகிறது. அன்றைய தீக்கதிரின் விலை ரூ.7. கூடுதல் பிரதி வேண்டுவோர் அந்தந்தப் பதிப்பில் முன்பணம் செலுத்தி தேவையான பிரதிகளை உறுதி செய்யுமாறு வேண்டுகிறோம்.
-முதன்மைப் பொது மேலாளர்