- மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பார்வை இழந்த மாற்றுத்திறனாளியான யாஷ் சோனகியாவிற்கு (25) மைக்ரோசாப்டில் வேலை கிடைத்துள்ளது. ஆண்டிற்கு ரூ.45 லட்சம் சம்பளத்துடன் பெங்களூ ருவில் உள்ள மைக்ரோ சாஃப்ட் அலுவலகத்தில் விரைவில் வேலைக்கு சேரவுள்ளார் யாஷ். “ஸ்கிரீன் ரீடர்” (பி டெக்) மென்பொருளின் உதவி யோடு கோடிங் கற்றுள்ள யாஷ் குறிப்பிட்ட காலம் வரை வீட்டிலிருந்தே பணியை மேற்கொள்ள மைக்ரோசாஃப்ட் அறி வித்துள்ளது.
- பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல் வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்துப்பேசினார்.
- இந்தியாவில் 2021-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மொத்தம் 4 லட்சத்து 28 ஆயிரத்து 278 வழக்கு கள் பதிவாகி உள்ளன. கடந்த ஆண்டுடன் (2020) ஒப்பிடுகையில் 2021-ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை கள் 19.34% அளவுக்கு அதிகரித்து உள்ளதாக தேசிய குற்ற ஆவ ணங்கள் வாரியம் அறி க்கை வெளியிட்டுள்ளது.
- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ ஆகஸ்ட் 27-ஆம் தேதி காலமானதாகவும், இறு திச் சடங்குகள் செவ்வா யன்று நடைபெற்றதாக வும் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
- உலகப் புகழ்பெற்ற காதல் நினைவுச் சின்னமான தாஜ்மஹாலை “தேஜோ மஹாலயா” என்று பெயர் மாற்ற அப்பகுதி பாஜக கவுன்சிலர் தீர்மான யோச னையை முன்வைத்துள் ளார். இதுகுறித்து ஆக்ரா மாநகராட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என செய்தி வெளியாகி யுள்ளது.
- ஒன்றிய அரசு பணவீக்க த்தை மட்டுமே மக்கள் மீது திணித்துள்ளது. மக்களின் வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தும். இத னால்தான் சத்தீஸ்கர் மாநிலத்தில் (காங்கிரஸ் ஆட்சி) வேலையின்மை விகிதம் குறைவாக உள் ளது என இமாச்சலப்பிர தேச மாநிலம் சிம்லா வில், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் கூறி யுள்ளார்.
- பஞ்சாப் மாநிலம் தரன் தரன் மாவட்டத்தில் உள்ள பட்டி என்ற பகுதி யில் அமைந்த கிறிஸ்தவ ஆலயத்திற்குள் 4 பேர் கொண்ட கும்பல் திடீ ரென புகுந்து தாக்குதல் நடத்தி இயேசு கிறிஸ்து சிலையை உடைக்க முயன்றுள்ளனர்.
- தற்போதுள்ள அரசியல் சூழல் நீடிக்குமானால் பதவியில் இருந்து விலகி விடப்போவதாக இராக்கின் பிரதமர் முஸ்தபா அல் காதிமி அறிவித்துள்ளார். இராக்கில் கடந்த ஆண்டு அக்டோபரில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அப்போதிலிருந்து தற்போது வரையில் அமைச்சரவையை அமைக்க முடியாமல் அரசியல் கட்சிகள் திணறி வருகின்றன. இப்படிப்பட்ட நிலையற்ற தன்மையில் தன்னால் பிரதமர் பொறுப்பில் தொடர முடியாது என்று காதிமி கூறியுள்ளார்.
- ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கடுமையான வெப்பம் நிலவுவதால் அந்நாட்டின் மத்தியப் பகுதியில் பெரும் நெருப்பு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஸ்பெயினின் மத்தியப் பகுதி நகரமான அல்பசெடியில் எரிந்து கொண்டிருக்கும் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன. மேலும் நெருப்பு பரவாமல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், எரிந்து கொண்டிருக்கும் தீ பெரும் சேதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்று உள்ளாட்சி அமைப்பின் நிர்வாகிகள் கூறுகின்றனர்.
- பாகிஸ்தானில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் வடக்குப் பகுதிகளில் இருந்து தெற்குப் பகுதிகளுக்கு ஏராளமானோர் இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது. சுமார் 3 கோடி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அரசு வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. கோடானு கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதால், சர்வதேச நிவாரணம் உடனடியாக தேவை என்று பாகிஸ்தான் அரசு கோரிக்கை வைத்துள்ளது.
- நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு வினா டிக்கு 4,006 கனஅடியி லிருந்து, 4,800 கனஅடி யாக அதிகரிக்கப்பட்டுள்ளது.