புதுதில்லி, ஆக. 19 - மருத்துவத்துறை பணியாளர்களைப் பாது காக்கும் வகையில் உரிய சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக் குழு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கோரப்பட்டிருப்பதாவது: மேற்குவங்க மாநிலத்தில் ஆர்.ஜி. கர் மருத்துவ மனையில் இளம் பெண் டாக்டர் ஒருவர் காட்டு மிராண்டித்தனமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதற்கு எதிராக முன்னெப்போ தும் இல்லாத அளவிற்கு, டாக்டர்கள், குறிப்பாக ஜூனி யர் டாக்டர்கள் கோபாவேசத்துடன் தன்னெழுச்சி யாக அணிதிரண்டிருப்பது பாதிப்புக்கு ஆளான இளம் டாக்டருக்கு ஒருமைப்பாடு தெரிவிப்ப தற்காக மட்டுமல்ல, நாட்டில் எந்த அளவிற்கு மிக மோசமான முறையில் பாதுகாப்பற்ற நிலை யில் அவர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் விதத்திலும் அமைந்திருக்கிறது. இவர்களின் இப்போராட்டம் மக்கள் மத்தியில் விரிவான அளவில் ஆதர வினைப் பெற்றிருக்கிறது. மோடி அரசாங்க மானது. மருத்துவப் பணியாளர்களின் பாது காப்புக்காக ஓர் ஒருங்கிணைந்த சட்டம் வேண்டும் என்று கோருகிற அவர்களின் கோரிக்கைக்கு செவிமடுப்பதற்குப் பதிலாக, இந்தப் பிரச்சனை யை ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் மட்டத்தில் ஒரு குழு அமைக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறது. மருத்துவத்துறையில் பணிபுரிபுவர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டு மேலும் காலதாமதம் செய்திடாமல் ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும். உச்ச நீதிமன்றம், ஆர்.ஜி.கர் வழக்கை தாமாகவே முன்வந்து (ளரடி அடிவடி) எடுத்துக் கொண்டுள்ள அதே சமயத்தில், இது தொடர்பாக பொருத்தமான சட்டத்தை இயற்றுவது என்பது ஒன்றிய அரசாங்கத்தின் அதிகார வரம்பெல்லைக்கு உட்பட்டதாக இருக்கிறது. மேற்கு வங்க அரசாங்கத்தைப் பொறுத்தவரை, இது தொடர்பாக நீதியின் செயல்முறைகளை நாசப்படுத்தும் விதத்தில் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக சாட்சியங்களைக் கொண்டு வரு கிறது. அதன்மூலம் இது தொடர்பாக கேள்வி களை எழுப்புகிறவர்களை மிரட்டிப் பணி யவைத்திடும் வேலைகளில் இறங்கி இருக்கிறது. முதலமைச்சர் மற்றும் மாநில அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று பாதிப்புக்கு உள்ளான மருத்துவரின் தந்தை அறிக்கை வெளி யிட்டிருப்பதை, மக்களும் மிகப்பெரிய அளவில் எதிரொலிப்பது என்பது, இந்த சம்பவத்தை ஒவ்வொரு கட்டத்திலும் மூடி மறைப்பதற்காக மாநில அரசாங்கம் மேற்கொண்டு வரும் எதார்த்த நிலையைப் பிரதிபலிக்கிறது. ஒன்றிய அரசாங்கம் இதுதொடர்பாக பொருத்தமான சட்டம் ஒன்றை அவசரமான முறையில் இயற்றிட வேண்டும் என்று அர சியல் தலைமைக்குழு கோருகிறது. காட்டு மிராண்டித்தனமான முறையில் இக்குற்றத்தைப் புரிந்துள்ள கிரிமினல்களைப் பாதுகாத்திடும் விதத்தில் இப்பிரச்சனையை மூடிமறைத்திட மாநில அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை அரசியல் தலைமைக்குழு கண்டிக்கிறது. பாதிப்புக்கு உள்ளான மருத்துவ ருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் நீதி வழங்க வேண்டும் என்றும் கோருகிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. (ந.நி.)