states

வகுப்பறையிலேயே தற்கொலை செய்து கொண்ட தலித் மாணவர்

ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லி நகருக்கு அருகே உள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவர் (15 வயது) ஒருவரை சாதியை சொல்லி இரண்டு ஆசிரியர்கள் திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த அந்த மாணவர், வகுப்பறையிலேயே தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விஷயம் அறிந்த பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் ஒன்றாக கூடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.  போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், கடும் நடுவடிக்கையுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, மாணவனின் குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.  இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது கொலை வழக்கின் கீழும், பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.