states

அரசுத் துறைகளில் 9.64 லட்சம் காலியிடங்கள்

இந்திய அரசுத் துறைகளில் ஒப்புதல் அளிக்கப் பட்ட 40 லட்சம் பணியிடங்களில் 30 லட்சத்திற்கும் சற்று அதிகமானவர்களே பணியில் உள்ளனர். 9.64 லட்சம் பணியிடங்கள் தற்போது நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.இந்தத் தகவலும் கூட 2023ஆம் ஆண்டு மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையிலும், மக்கள வையிலும் பெறப்பட்டதே ஆகும். Vஇதில் ரயில்வே துறையில் 2023 ஜூலை 1 நில வரப்படி 2.63 லட்சம் பணியிடங்கள் நிரப்பப் படாமல் காலியாக உள்ளன. இவற்றில் 53,178 பணி யிடங்கள் ரயில்வே  செயல்பாட்டிற்கான பாதுகாப்பு சார்ந்தவை ஆகும். இந்நிலையில் நமது நவீன வரலாற்றிலேயே மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றான ஒடிசா- பாலசூரில் நடந்த விபத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததில்   வியப்பொன்றுமில்லை.

    பல்வேறு கல்வி நிலையங்களிலும் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு அரசு தயாராக இல்லை. மத்திய பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வி நிறுவ னங்களில் அனுமதி அளிக்கப்பட்ட 18,956 ஆசிரி யர் பணியிடங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு (6,028 பணியிடங்கள்) பிப்ரவரி மாத நிலவரப் படி காலியாக உள்ளன. இந்தத் தகவலும் கூட தகவலறியும் உரிமைச் சட்டத்தின் வழி பெறப்பட்ட பதிலாகும்.

    அனைத்து ஒதுக்கீட்டுப் பிரிவுகளிடையே பொதுப் பிரிவில் உள்ள பணியிடங்களில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள பணியிடங்களின் விகிதம் மிகக் குறைவாகவே உள்ளது. தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் அரசின் பாகுபாடு நன்றாகவே வெளிப்படுகிறது. ஏனெனில், இந்தப் பிரிவினருக்கான பணியிடங்களை நிரப்ப அரசு தயக்கம் காட்டுகிறது.

    அதைப்போலவே ஒன்றிய அரசின் ஐஐடி, எய்ம்ஸ் போன்ற இதர உயர்கல்வி நிறுவனங்களிலும் கூட தற்போது 5,028 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.