states

3 மருத்துவக் கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் கிடைத்தது

சென்னை, ஜூன் 8- சென்னை ஸ்டான்லி, தருமபுரி,  திருச்சி ஆகிய மருத்துவக் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ் திரும்ப பெறப்பட்டுள் ளதாகவும் கல்லூரிகள் மீண்டும்  செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள தாகவும் சுகாதார துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் தெரிவித் துள்ளார். தமிழ்நாட்டில், 38 அரசு மருத்து வக் கல்லூரிகள் உட்பட 71 மருத்து வக் கல்லூரிகள் தேசிய மருத்துவ  ஆணையம் (என்எம்சி) அனுமதி யுடன் இயங்கி வருகிறது. இதில் 38 அரசு கல்லூரிகளில் 5,225 எம்பி பிஎஸ் இடங்கள் உள்ளன.  இந்நிலையில் தலா 500 எம்பிபி எஸ் இடங்களை கொண்ட அரசு  ஸ்டான்லி மருத்துவமனை, திருச்சி அரசு கேஏபி விஸ்வநா தன் மருத்துவக் கல்லூரி மற்றும்  தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி என மூன்று கல்லூரிகளுக்கு அங்கீகாரத்தை திரும்பப் பெற முடிவு செய்து இளங்கலை மருத்து வக் கல்வி வாரியம் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம்  அனுப்பியிருந்தது. பயோமெட்ரிக் வருகை பதிவு குறைபாடுகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் திருப்திகரமாக இல்லை போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் மூன்று  கல்லூரிகள் மற்றும் புதுச்சேரி யில் ஒரு கல்லூரிக்கு வாரியம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்நிலையில், சைதாப் பேட்டை நகர்ப்புற நலவாழ்வு மருத்துவ மையத்தை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணி யன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறு கையில், “சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிக்கு ரத்து செய்யப்பட்ட அங்கீகாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. தருமபுரி, திருச்சி ஆகிய மருத்துவ கல்லூரிகளுக்கு வழங்கப்பட்ட நோட்டீசும் திரும்ப பெறப்பட்டுள் ளது. மருத்துவக் கல்லூரிகள் தொடர்ந்து இயங்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. முதல மைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கையால் மாநில உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது”என்றார்.