சென்னை,அக்.10- தீபாவளியையொட்டி தமிழகத்தில் 16,888 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.எஸ்.சிவ சங்கர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் திங்களன்று (அக்.10) நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வெளி யிடப்பட்டுள்ள அறிக்கையில், “தீபாவளியை முன்னிட்டு, அக்.21 முதல் 23 ஆம் தேதி வரை தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 4218 சிறப்புப் பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, சென்னையிலிருந்து 10,518 பேருந்துகளும், பிற ஊர்களி லிருந்து மேற்கண்ட 3 நாட்க ளுக்கு 6,370 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,888 பேருந்துகள் இயக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி முடிந்த பின்பு, பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு அக்.24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை வரை தினமும் இயக்க கூடிய 2,100 பேருந்துக ளுடன், 3062 சிறப்புப் பேருந்துக ளும் மற்ற ஊர்களிலிருந்து 3790 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 13,152 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் 5 இடங்களிலிருந்து பேருந்துகள் பிரித்து இயக்கப் படவுள்ளன. அதன்படி, மாத வரம் புதிய பேருந்து நிலை யத்திலிருந்து செங்குன்றம் வழியாக செல்லும் பேருந்துக ளும், கே.கே.நகர் பேருந்து நிலையத்திலிருந்து ஈசிஆர் வழி யாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்து களும் இயக்கப்படும். தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் (வழி: திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி) பேருந்துகளும், தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, வடலூர், சிதம்பரம், கடலூர், புதுச்சேரி பேருந்துகளும் இயக்கப்படும். பூந்தமல்லி பேருந்து நிலை யத்திலிருந்து வேலூர், ஆரணி, ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி, திருப்பதி பேருந்து கள் இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலை யத்திலிருந்து நாகை, திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோ வில் சேலம், கோவை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிக ளுக்கு பேருந்துகள் இயக்கப் படும். முன்பதிவு செய்துள்ள பேருந்துகள் வெளிச் சுற்றுச் சாலை வழியாக வண்டலூர், ஊரப்பாக்கம் வழியாக இயக்கப்படும். இதற்காக கோயம்பேட்டில் 10, தாம்பரம் சானடோரியத்தில் ஒன்று என 11 முன்பதிவு மையங் கள் திறக்கப்படும். மேலும், இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 044-24749002, 18004256151 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேற்கூறிய 4 பேருந்து நிலையங் களுக்கும் மக்கள் செல்ல வசதியாக மாநகர இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.