states

ஒரு விளக்கம்

தீக்கதிர் நேற்றைய 5ம் பக்கத்தில் வெளியான ‘பாதுகாப்பில்லாத வேலை, நிரந்தரமில்லாத வேலை’ எனும் செய்தியின் 4வது பத்தியில், குறிப்பிட்டிருந்த பி.எப்., இஎஸ்ஐ தொடர்பாக ஒரு விளக்கம்: “தொழிலாளி ஊதியத்திலிருந்து 6 விழுக்காடு, முதலாளியிடமிருந்து 6 விழுக்காடு பிடித்தம் செய்யப்பட்டு வருங்கால வைப்பு நிதி உருவாக்கப் பட்டது. முதலாளியிடமிருந்து 3.25 விழுக்காடு, தொழிலாளியிடம் இருந்து 0.75 விழுக்காடு பெற்று இஎஸ்ஐ உருவாக்கப்பட்டது. வருங்கால வைப்பு நிதி சட்டத்தின் படி தொழிலாளியின் ஊதியத்திலிருந்து 12 விழுக்காடு, முதலாளியிடம் இருந்து 12 விழுக்காடு பிடித்தம் செய்யப்பட்டு வருங்கால வைப்பு நிதி (பிஎப்) க்கு  செலுத்தப்படுகிறது. பி.எப் திட்டத்திற்கு முதலாளி அளிக்கும் 12 விழுக்காடு பங்குத் தொகையில் 3.67 விழுக்காடு வருங்கால வைப்பு நிதி திட்டத் தொகையாகவும், 8.33 விழுக்காடு பென்ஷன் திட்டத்திற்கும் செலுத்தப்படும். இது தவிர இ.எஸ்.ஐ திட்டத்திற்கு தொழிலாளியின் ஊதியத்தில் 0.75 விழுக்காடும், முதலாளியின் பங்களிப்பாக 3.75 விழுக்காடும் பிடித்தம் செய்யப்படுகிறது. தொழிலாளர் சார்ந்த முந்தைய 29 சட்டங்களை, ஒன்றிய அரசு 4 சட்டத் தொகுப்புகளாக மாற்றி விட்டது. இந்த சட்டத் தொகுப்புகள் வழிகாட்டு நெறிமுறைகள் அல்ல. சட்ட விதிமுறைகள் தான். இந்த நான்கு சட்டத் தொகுப்புகளிலும் தொழிலாளர்களின் நலன்களை, உரிமை களை முதலாளிகள் மறுப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. முந்தைய சட்டங்களில் இருந்து பாதுகாப்பு இதில் வெட்டி சுருக்கப் பட்டுள்ளது. -

ஆசிரியர்.