கொச்சி, ஜுலை 31- கேரள தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் முதலாவது பொதுக்குழுத் தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் அமோக வெற்றி பெற்றுள்ளது. அரசு நடத்தும் சுயஉதவி கல்லூரிகள் பிரிவில் இருந்து பொதுக்குழு வரையிலான அனைத்து இடங்களிலும் எஸ்எப்ஐ வேட்பாளர்கள் கேஎஸ்யூ-வை எதிர்த்து பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். தனியார் சுயநிதித் துறையில் 15 இடங்களிலும் எஸ்எப்ஐ மிகப்பெரிய பெரும்பான்மையைப் பெற்றது. அண்மை நாட்களில் கேரளாவில் எஸ்.எப்.ஐ மீது வலதுசாரி-வகுப்புவாத-ஊடகக் கூட்டணியினர் நடத்திய தாக்கு தலுக்கு மாணவர்களின் பதிலடிதான் இந்த வெற்றி என்று எஸ்.எப்.ஐ மாநிலச் செயலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்து ள்ளது. திருக்காக்கரா மாதிரி பொறி யியல் கல்லூரியில் தேர்தல் நடந்தது. சங்க நிர்வாகிகள் தேர்தல் பின்னர் நடைபெறும்.
வாக்குச்சாவடிக்குள் இளைஞர் காங்கிரஸ்-கேஎஸ்யு தாக்குதல்
தொழில்நுட்பப் பல்கலைக்கழக பொதுக்குழுத் தேர்தலின்போது சனி யன்று (ஜுலை 30) திருக்காக்கரை மாதிரி பொறியியல் கல்லூரியின் வாக்குச்சாவ டிக்குள் இளைஞர் காங்கிரஸ்-கேஎஸ்யு அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். கேஎஸ்யூ வேட்பாளர்களை யாரோ கடத்திச் சென்றதாகக் கூறி, வெளியில் இருந்து வந்த இளைஞர் காங்கிரஸ் அணி யினர் உள்ளே நுழைந்து காவல்துறை யினருடன் மோதலுக்கு முற்பட்டனர். வாக்குப்பதிவை நிறுத்த முயன்ற இளைஞர் காங்கிரஸார் 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.