states

வயநாடு நிலச்சரிவு : உயிரிழந்தோர் எண்ணிக்கை 413 ஆக உயர்வு

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத் தின் கிழக்கு பகுதி மலை கிராமங் களான சூரல்மலை, முண்டக்கை, புஞ்சேரிமட்டம், அட்டமலை, மேப்பாடி, குன்கோம் ஆகிய பகுதிகளில் கடந்த ஜூலை 30 அன்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் புஞ்சேரி மட்டம் கிராமம் முற்றிலும் அழிந்த நிலையில், சூரல்மலை, முண்டக்கை, அட்டமலை, மேப்பாடி, குன்கோம் ஆகிய பகுதிகள் நிலச்சரிவால் 70% அளவில் உருக்குலைந்துள்ளன. 

புஞ்சேரிமட்டம், அட்டமலை தவிர  மற்ற பகுதிகளில் 9ஆவது நாளாக மீட்புப் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. 

9ஆவது நாளான வியாழனன்று மதியம் வரை நிலச்சரிவில் உயிரி ழந்தோர் எண்ணிக்கை 413 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காணாமல் போன 150க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.