புது தில்லி, நவ.11- கேரள அரசின் கடன் வரம்பை கடுமையாக்கி நிதி நெருக்கடியை உருவாக்கும் ஒன்றிய அரசு, மாதந்தோறும் சராசரியாக ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கு கிறது. ஒன்றிய அரசால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.1.36 லட்சம் கோடி ரூபாய் கடன் எடுக்கப்பட்டுள் ளது. உள்நாட்டு சந்தையில் வாங்கிய கடன் மட்டும் மே மாதம் ரூ.1.69 லட்சம் கோடி, ஜூன் மாதம் ரூ.1.36 லட்சம் கோடி, ஜூலை ரூ.1.75 லட்சம் கோடி, ஆகஸ்ட் ரூ.1.36 லட்சம் கோடி, செப் டம்பர் மாதம் ரூ.1.36 லட்சம் கோடி. ஒன்றிய பட்ஜெட்டில் செல விடப்படும் 100 ரூபாயில் 40 ரூபாய் கடனாகும். நடப்பு ஆண்டு பட்ஜெட் ரூ.45 லட்சம் கோடியில் ரூ.17.99 லட்சம் கோடி கடனாக இருப்பதாக நிதியமைச்சர் மாநிலங்களவையில் தெரிவித்திருந்தார். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்ற நிறுவனங்கள் எடுத்த கடன்களை உட்படுத்தாததால், ஒன்றிய அரசின் கடன் அதிகரிக்காது. ஆனால், கேர ளத்தில், கிப்பியின் கடன் மாநில அரசின் பொறுப்பாக கருதப்படுகிறது. 2022-23இல் கடனை திருப்பிச் செலுத்து வதற்காக ஒன்றிய அரசு ரூ.72.7 லட்சம் கோடி செலவிட்டுள்ளது. 2021-22இல் ரூ.66.4 லட்சம் கோடியும் செலவிட்டுள்ளது.