states

img

ஏழையின் ‘வீட்டு’ கனவில் ஒரு கருப்பு நிழல் மாநிலத்தின் கடன் வரம்பில் ஹட்கோ கடன்

திருவனந்தபுரம், நவ.14- ஏழைகளின் வீட்டுக் கனவை நனவாக்கும் கேரள அரசின் லைப் வீட்டுத் திட்டத்தையும் ஒழிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.திட்டத்தை செயல்படுத்த நம்பி யிருக்கும் ஹட்கோ கடனை மாநி லத்தின் கடன் வரம்பில் சேர்க்க வேண்டும் என்று கூறிலைப் திட்டத்தை முடக்க முயற்சி நடக்கிறது.முன்ன தாக, இதே உத்தியைப் பயன்படுத்தி கிஃப்பி மற்றும் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய நிறுவனத்தை ஒழிக்க ஒன்றிய அரசு முயற்சித்தது. லைப் திட்டத்திற்காக கேரள நகர்ப்புற மற்றும் ஊரக வளர்ச்சி நிதிக் கழகம், ஹட்கோ நிறுவனத்திடம் ரூ.5500 கோடி கடன் பெற்றுள்ளது.இதை திருப்பிச் செலுத்தும் பொறுப்பு உள்ளாட்சி அமைப்புகளாலும், வட்டி  மாநில அரசாங்கத்தாலும் உறுதி செய்யப்படுகிறது.தற்போது இந்த கடனைமாநில அரசின் கடன் வரம்பில் சேர்த்து திட்டத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டியல் பழங்குடியினர், மீனவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த குடும்பங்கள் உட்பட 9 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு பாது காப்பான வீடு வழங்குவதை லைப் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒன்றிய மாநில அரசுகள் வீட்டு கட்டு மானத்திற்காக ஒதுக்கிய நிதி சேக ரிக்கப்பட்டு, மீதமுள்ளவை ஹட்கோ உள்ளிட்ட ஏஜென்சிகள் மூலம் கண்ட றியப்படுகின்றன.அதன்படி ஆகஸ்ட் 20 வரை 3,01,912 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

24,635 வீடுகள் கட்டுமானத்தில் உள்ளன.இதுவரை 12,213 கோடி செலவிடப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக அடையாளம் காணப்பட்ட 4,62,611 குடும்பங்களில் 1,51,478 பேர் வீடற்றவர்களாக உள்ள னர். 171 உள்ளாட்சி அமைப்புகளின் பய னாளிகளையும் சேர்த்துக் கொள்ளும் போது 5 லட்சத்தைத் தாண்டும்.அனை வருக்கும் வீடுகளை உறுதி செய்யும் முதல் மாநிலம் என்ற மாநிலத்தின் இலக்கை ஒன்றிய அரசு சிதைத்து வருகிறது. சிஏஜி தணிக்கை அறிக்கையில் கிஃப்பி மற்றும் ஓய்வூதிய நிறு வனத்தின் கடன்கள் குறித்து குற்றச்சாட்டுகளை எழுப்பி அவற்றை  முடக்கும் நடவடிக்கை துவக்கப் பட்டது. அதன் ஒரு பகுதியாக கடனை மாநிலத்தின் கணக்கில் சேர்க்க  வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதைத் தொடர்ந்து, வெளிநாட்டுக் கடன்கள் முடக்கம் தொடர்வதால், கிப்பி-யில் ஒன்றிய ஏஜென்சிகளின் தேவையற்ற தலையீடு தொடர்கிறது. ஓய்வூதிய நிறுவனத்திற்கு கூட்டுறவு வங்கிகள் மற்றும் அரசு நிறு வனங்களின் உபரி நிதி வழங்கப்படு கிறது. இந்த தற்காலிக பரிவர்த்தனை களை கடனாகக் கருதி மாநிலத்தின் கடன் வரம்பில் சேர்க்க வேண்டும் என்றும் சிஏஜி கோரியது. இதனால் மாதாந்திர நல ஓய்வூதியம் நிறுத்தப் படும் நிலை உருவாக்கப்படுகிறது.