பாடப்புத்தகங்களில் எந்த இயக்கத்தின் குறுகிய கருத்தியல்நிலைப் பாடுகள் அல்லது கருத்தியல் பிரச்சாரம் இருக்கக் கூடாது. உண் மையான வரலாற்றையும் அறிவிய லையும் கற்பிக்க வேண்டும். இது தான் கேரளாவின் நிலைப்பாடா கும். பாபர் மசூதி மற்றும் அயோத்தி தலைப்பு அடங்கிய பாடத்திட் டத்தை மாற்றிய என்சிஇஆர்டி-யின் நடவடிக்கையை கேரளம் ஏற்காது என்று கல்வி அமைச்சர் வி.சிவன் குட்டி தெரிவித்துள்ளார்.
குழு அமைப்பு
என்சிஇஆர்டி பாடப்புத்தகங்க ளில் சில பகுதிகள் வேண்டு மென்றே புறக்கணிக்கப்பட்டது கேரளம் உட்பட நாடு முழுவதும் பெரும் விவாதங்களுக்கு வழி வகுத்தது. இந்த மாற்றங்கள் நாட் டின் அரசமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளையும் மதச்சார்பற்ற தன்மையையும் சீர்குலைக்கும் என்று பல தரப்பிலிருந்தும் கவ லைகள் எழுந்துள்ளன.
பாடப்புத்தகங்களில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்வ தற்கும் அவற்றின் தாக்கங்களை மதிப்பிடுவதற்கும் எஸ்சிஇஆர்டி, கல்வி வல்லுநர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள் அடங்கிய குழுவை நியமித்தது. அரசமைப்புச் சட்டத்தால் உத்தர வாதம் அளிக்கப்பட்ட மதச்சார் பின்மை, ஜனநாயகம் மற்றும் சமூக நீதி போன்ற விழுமியங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவ சியத்தை இந்தத் தேர்வு எடுத்து ரைத்தது.
இணையான பாடப்புத்தகம்
கேரளத்தின் கலாச்சார பாரம் பரியம், மதச்சார்பற்ற அணுகு முறை மற்றும் முற்போக்கு மன நிலைக்கு ஏற்ப கல்வி வடிவ மைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் என்சிஇஆர்டியால் விடுபட்ட பகுதிகளை இணைத்து இணையான பாடப்புத்தகங்களை கேரளம் தயாரித்தது. இந்த பாடப்புத்தகங்கள் நாடு மற்றும் கேரளத்தின் சமூக-கலாச்சார பண்புகளை உள்ளடக்கியதோடு அரசமைப்பு மதிப்புகளை நிலை நிறுத்துகிறது.
கேரளத்தின் இந்த நடவ டிக்கை நாடு முழுவதும் பெரும் விவாதங்களுக்கு வழிவகுத்தது. இந்த சம்பவம் கல்வியின் உள்ள டக்கம் மற்றும் தன்மை பற்றிய முக்கி யமான விவாதங்களை எழுப்பி யது. கேரள கல்வித்துறையில் இந்த தனித்துவமான தலையீடு இந்திய மதச்சார்பற்ற சமூகத்திற்கு நம் பிக்கையை ஏற்படுத்துவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.