states

img

திருச்சூர் பூரம் நிறைவு

திருச்சூர், மே 1- பாண்டி மேளத்துடனும் 15 யானைகள் அணிவகுப்புடனும் திருச்சூர் பூரம் திருவிழா திங்களன்று (மே. 1) நிறை வடைந்தது. திங்களன்று காலை 8 மணிக்கு மணிகண்டனல் பந்தலில் இருந்து பாறமேக்கம் வரையும், நாய்க்கனல்பந்தலில் இருந்து திருவம்பாடி, எழுநல்லூர் வரையும் 15 யானைகள் அணிவகுப்பு மற்றும் பாண்டி மேளம் நடைபெற்றது. வாண வேடிக்கையின் நிறைவில்  அடுத்த ஆண்டு பூரம் குறித்து அறிவிக்கப்பட்டது. இரவில் உத்திரம் தீபம் ஏற்றி கொடி இறக்கப்பட்டது.