திருவனந்தபுரம், மார்ச் 19- கேரள அரசு தத்தெடுத்தது மாநிலத்தில் உள்ள 64,006 ஏழை குடும்பங்களைத்தானே தவிர, அதானி-அம்பானியை அல்ல என்று சிபிஐ(எம்) கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் தெரிவித்தார். கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் தலைமையிலான மக்கள் பாதுகாப்பு அணி வகுப்பு பிப்ரவரி 20 அன்று கர்நாடக மாநில எல்லை அருகில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கும்பளத்தில் இருந்து தொடங்கியது. இதனை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் முதல்வருமான பினராயி விஜ யன் தொடங்கி வைத்தார். 14 மாவட்டங்களில் உள்ள கடற்கரைகள், சமதளங்கள், மலைப்பகு திகள் என உள்ள 140 சட்டப்பேரவை தொகுதி களில் மாபெரும் வரவேற்பு இந்த அணி வகுப்புக்கு கிடைத்தது. திருவனந்தபுரம் புத்தரிக்கண்டம் மைதா னத்தில் சனிக்கிழமை (மார்ச் 18) மாலை அணி வகுப்பின் நிறைவு நிகழ்ச்சி, மாநாடு போன்று நடைபெற்றது.
இதில் மக்கள் பாதுகாப்பு அணிவகுப்பின் தலைவர் எம்.வி.கோவிந்தன் ஆற்றிய உரை வருமாறு: “மக்கள் திரளுக்கு இடையே நீந்தி இந்த மேடைக்கு வந்திருக்கிறோம். இந்த அணி வகுப்புக்கு கடந்த 26 நாட்களாக கேரளத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பு மகத்தானது. ஒரு புதிய அனுபவம். ஒரு புதிய கேரளத்தை படைக்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கு பிறகு இருக்க வேண்டிய நிலைக்கு கேரளத்தை இப் போதே உயர்த்திக் காட்ட முடியும் என்கிற சிந்த னையுடன் முதல்வர் பினராயி விஜயன் கேர ளத்தை ஆட்சி செய்கிறார். கேரளம் இப்போதே இந்தியாவுக்கு முன் மாதிரியாக உள்ளது. ஏழை-எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மேற்கொண்ட முயற்சியின் விளைவாக சிறப்பான வாழ்க்கை அவர்களுக்கு கிடைத்துள்ளது. இந்தியாவி லேயே கேரளத்தில் மட்டுமே இது சாத்தியமாகி உள்ளது. இதை மேலும் சிறப்பானதாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதுதான் இடது ஜன நாயக முன்னணியின் முக்கிய குறிக்கோள்.
வறுமையில் 31 கோடி மக்கள்
கேரளத்தில் அனைத்து வகையிலும் மக்க ளின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருகிற போது, இந்தியா பட்டினியில் உள்ளது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள். பட்டினி கிடப்போர் கூடுதல் பட்டினிக்கு உள்ளாகி றார்கள். இதுதான் இந்தியாவின் வளர்ச்சியா? நரேந்திரமோடி இதைத்தான் கையாள்கிறார். மோடி வளர்த்தெடுத்தது அதானியையும், அம் பானியையும் தான். உண்மையில் ஒரு சதவீதம் பேரின் கைகளில் இந்தியாவின் 40 சதவீத சொத்துகள் உள்ளன. நாமெல்லாம் இடம்பெறும் 50 சதவீதம் பேரில், வெறும் 3 சதவீதம் சொத்துகள் மட்டும் தான் உள்ளது. வறுமையை அனுபவிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு குடியிருக்க வீடில்லை. சொந்த நிலம் இல்லை. அவர்களது குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லத் தொடங்க வில்லை. இப்படி வறுமையின் ஊடாக கடந்து செல்லும் ஏழைகளின் எண்ணிக்கை 31 கோடி என ஒன்றிய ஆட்சியாளர்களின் புள்ளி விவ ரங்களே தெரிவிக்கின்றன.
கேரளத்தின் வளர்ச்சிக் கொள்கை
இந்தியாவின் வளர்ச்சிக் கொள்கை இது என்றால், கேரளத்தின் வளர்ச்சிக் கொள்கை முற்றிலும் மாறுபட்டது. பட்டியல் சாதி, பழங்குடி, விவசாயி, விவசாயத் தொழிலாளி, மரம் ஏறு வோர், நெசவாளர், மீன் தொழிலாளர், அணி திரட்டப்பட்டோர், திரட்டப்படாதோருமான ஏழை-எளிய மக்களின் வாழ்க்கை மேம்பட்ட தாக மற்றப்படுகிறது என்பதுதான் கேரளத்தின் தனிச்சிறப்பு. அதுதான் கேரள மாடல். இந்த கேரளா மாடலை மேலும், எப்படி வலுப்படுத்த லாம் என சிந்தித்தோம். அப்போதுதான் நிதி ஆயோக்கின் கணக்கின்படி, கேரளத்தில் 0.7 சதவீதம் மக்கள் பட்டினியில் இருப்பது தெரியவந்தது.
பினராயி விஜயன் தலைமையில் அமைந்த இரண்டாவது எல்டிஎப் அரசின் முதல் கூட்டத்தில் பேசிய முதல்வர், இதுகுறித்து கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். உள்ளாட்சித் துறை அமைச்சராக நான் இருந்தேன். குடும்பஸ்ரீ உள் ளாட்சி அமைப்புகள் மூலம் கணக்கெடுப்பு துல்லியமாக நடத்தப்பட்டு 64,006 குடும்பங்கள் வறியவரிலும் வறியவராக இருப்பது கண்ட றிப்பட்டது. அவர்களை இந்த அரசு தத்தெடுத் துள்ளது. நரேந்திர மோடி அரசு தத்தெடுத்தி ருப்பது அதானியையும், அம்பானியையும்தான் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த அணிவகுப்பின் பகுதியாக லட்சக்கணக்கான மக்கள் திரண்டதால், பொறாமை கொண்டு அர சுக்கும், முதல்வர் பினராயி விஜயன் மற்றும் தலைவர்களுக்கு எதிராக பொய்யான செய்தி களை பரப்புகின்றனர். இதற்கு ஊடகங்களின் ஆதரவும் உள்ளது. ஆனால் அதில் கவனம் செலுத்தாமல் மக்களுடன் உறுதியாக நிற்கி றோம். அணிவகுப்பை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம். இவ்வாறு எம்.வி.கோவிந்தன் பேசினார். நிறைவு விழாவுக்கு அமைச்சர் வி.சிவன் குட்டி தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர் வி.ஜோய் வரவேற்றார். எம்.வி.கோவிந்த னுடன் அணிவகுப்பில் இடம்பெற்ற கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.சுவராஜ், ஜெய்க் சி.தாமஸ், சி.எஸ்.சுஜாதா, கே.டி.ஜலீல், பி.கே.பிஜு ஆகியோருக்கு செவ்வாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி, மூத்த தலைவர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
கப்பல் வடிவ வாகனம்
அணிவகுப்பின் கடைசி வரவேற்பு மைய மான கோவளம் தொகுதியின் கடற்கரை பகுதி யான காஞ்சிரம்குளத்தில், எம்.வி.கோவிந்தன் கப்பல் போன்று வடிவமைக்கப்பட்ட வாக னத்தில் அழைத்து வரப்பட்டார். கொத்தபுரம் மீனவர்கள் கடல் மீன்களுடன் வந்தது வித்தியா சமான அனுபவமாக இருந்தது. புத்தரிக்கண்டம் மைதானத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குவிந்ததால் மைதானம் நிரம்பி அரு கில் உள்ள சாலைகளிலும் கூட்டம் அலைமோதி யது.