states

img

சர்வதேச-தேசிய அங்கீகாரம் பெறுகிறது கேரளம்

கொச்சி, மே 25- கேரளா தனது வளர்ச்சி நட வடிக்கைகளுக்காக தேசிய மற்றும்  சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள் ளது. சில  யுடிஎப் தலைவர்கள் கேரளா வின் சாதனைகளை பொறுத்துக் கொள்ளவில்லை. யு.டி.எப்-யின் எதிர்காலம் குறித்து அதிலுள்ள கட்சிகள் கவலையில் உள்ளன என்று  முதல்வர் பினராயி விஜயன்கூறினார்.   திருக்காக்கரை சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங் கேற்ற அவர் மேலும் பேசியதாவது:  கேரளாவின் வளர்ச்சியை குழி தோண்டிப் புதைக்க ஒன்றிய அரசும் முயற்சிக்கிறது. நெருக்கடியின் போது  பாஜக எந்த உதவியும் செய்ய வில்லை. நெருக்கடியின்போது சர்வதேச உதவியையும் தடுத்துள் ளது. கேரளா எல்லா வகையிலும் திண றியது. ஆனால், அந்தச் சோகத்தின் போது அரசு தலையைப் பிடித்துக் கொண்டு அழவில்லை. மாறாக, நாட்டை எவ்வாறு முன்னோக்கி நகர்த்துவது என்பதைக் கண்டு பிடிப்பதே முன்னுரிமையாக இருந்தது. இதன் விளைவாக, நம் நாட்டின் நலனில் எந்தக் குறைவும் இல்லை. எத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் நாடு பல்வேறு துறைகளில் துடிப்பான முன்னேற்றம் கண்டது என்பதை ஒவ்வொன்றாக ஆராய்ந்தால் தெரியவரும் என்றார். பாஜகவுக்கு ஆட்களை அனுப்பும் மையமாக காங்கிரஸ் மாறிவிட்டது. நாடு முழுவதும் காங்கிரஸ் சரிவை சந்தித்து வருகிறது என்றும் முதல்வர் கூறினார்.