இரண்டரை ஆண்டில் 3.2 லட்சம் தொழில்கள்; 93 ஆயிரம் பெண் தொழில்முனைவோர்
திருவனந்தபுரம் சிறு தொழில் வளர்ச்சியில் கேர ளம் வரலாற்று சாதனையுடன் முன்னேறி வருகிறது. தொழில் துறையால் அறிவிக்கப்பட்ட தொ ழில்முனைவோர் ஆண்டுத் திட்டத் தின் மூலம் இரண்டரை ஆண்டுக ளில் 3 லட்சத்து 227 சிறு தொழில்கள் தொடங்கப்பட்டன. இதில் 93 ஆயிரம் பேர் பெண் தொழில் முனை வோர் ஆவர். இதன்மூலம் குறுகிய காலத்தில் 6,38,322 வேலை வாய்ப்பு கள் உருவாக்கப்பட்டுள்ளன. மொத்த மாக ரூ.19,446.26 கோடி முதலீடு சாத்தி யமாகி உள்ளது. இதன்மூலம் எளி தாக தொழில் நடத்துவதில் நாட்டி லேயே முதலிடத்தில் கேரள மாடல் மிளிர்கிறது. மேலும் சாதாரண மனி தர்கள் தொழில் தொடங்குவதை எளி தாக்கியுள்ளது கேரளம்.
தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் 4% வட்டியில் ரூ.10 லட்சம் வரையிலான கடன்கள் இந்த சாதனைக்கு முக்கியக் காரணமாகும். தொழில் தொடங்க விரும்பினால் தேவையான தகவல் மற்றும் உதவி யைப் பெறுவதில் சிரமம் உள்ளவர்க ளுக்கான வழிகாட்டி அனைத்து ஊரா ட்சிகளிலும் உள்ளன. தொழில் தொடங்க விரும்புவோருக்கு உதவ 1,153 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள் ளனர். இதற்காக 1034 உதவி மையங்கள் செயல்பட்டன.
கதவடைப்பு மிகக் குறைவு
கேரளத்தில் மிகக்குறைந்த அளவே கதவடைப்பு ஆலை மூடல் விகிதம் உள்ளது. சிறு குறு நடுத்தர தொழில்களில் (எம்எஸ்எம்இ) இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 எம்எஸ்எம்இ-க்களை நான்கு ஆண்டு களுக்குள் சராசரியாக ரூ.100 கோடி விற்றுமுதல் கொண்ட வணிகங்களாக வளர்க்கும் நோக்கத்துடன் இந்த அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட மிஷன் 1000 திட்டம் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக உள்ளது.
நாட்டில், ஒரு வருடத்தில் தொ டங்கும் 30 சதவிகிதம் எம்எஸ்எம்இ கள் மூடப்பட்டுவிட்டன, ஆனால் கேரளாவில் அது 15 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும், அவர்களின் தயாரிப்புகளை சர்வ தேச அளவில் சந்தைப்படுத்தவும் தொடங்கப்பட்ட “கேரள பிராண்ட் திட்டம்”, உலக சந்தையில் அவர்களுக் கான கதவுகளைத் திறந்துள்ளது.