கேரளாவில் சுமார் 3 லட்சம் தாய்மார்களுக்கு மே 7 ஆம் தேதி முதல் சைபர் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று கேஐடிஇ-யின் சிஇஓ தெரிவித்தார்.
இதுகுறித்து கேஐடிஇ-யின் சிஇஓ கே. அன்வர் சதாத் கூறுகையில், 14 மாவட்டங்களில் நடைபெறும் இந்த திட்டத்தை பொதுக்கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி, வரும் சனிக்கிழமை அன்று காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
லிட்டில் கேஐடிஇ, ஐடி கிளப்களை கொண்ட உயர்நிலைப்பள்ளிகளில் பதிவு செய்யும் முதல் 150 தாய்மார்களுக்கு முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் சைபர் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் 5 அமர்வுகள் உட்பட 3 மணி நேரத்திற்குள் பயிற்சித்திட்டம் முடிக்கப்படும்.
முதல் அமர்வில் ஸ்மார்ட் போன்கள், இணையம் மற்றும் அதன் பாதுகாப்பான பயன்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய அறிமுக அமர்வாக இருக்கும்.
2ஆவது அமர்வு மொபைல் போன்களின் பயன்பாடு குறித்து கவனம் செலுத்துகிறது. தொலைபேசிகள், கடவுச்சொற்களின் பாதுகாப்பு, ஒடிபி.க்கள் பின்,.கள் போன்றவை இருக்கும்.
மூன்றாவது அமர்வில் போலிச் செய்திகளைக் கண்டறிதல், உண்மைகளைச் சரிபார்த்தல் மற்றும் போலிச் செய்திகளைத் தடுப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
நான்காவது அமர்வில் சைபர் தாக்குதல்கள் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து எடுத்துரைக்கும்.
இறுதி அமர்வில், இணையம்-உலகம் மூலம் எல்லையற்ற நோக்கத்துடன் அழைத்துச் செல்கிறது என்பதை விளக்கும்.
இந்தப் பயிற்சியானது 30 பங்கேற்பாளர்களைக் கொண்ட குழுவாக நடத்தப்படும். இதில் 4 லிட்டில் கைட்ஸ் உறுப்பினர்கள் மற்றும் கேஐடிஇ மாஸ்டர்களான ஆசிரியர்களால் வழிநடத்தப்படும்.
மாநில மற்றும் மாவட்ட அளவில் 4,000 ஆசிரியர்கள் மற்றும் 8,000 மாணவர்களுக்கு இதுவரை பயிற்சி நிறைவடைந்துள்ளது, மேலும் மே 7 முதல் 20 வரை நடைபெறவுள்ள மாபெரும் பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று அன்வர் சதாத் தெரிவித்தார்.
தாய்மார்களுக்கான இந்த பயிற்சியானது, சைபர் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் அதன் பாதுகாப்பான பயன்பாடு குறித்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும் என்றார்.