states

img

மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த கொடுமை

சோஹவ் (உ.பி) செப்.11- உத்தரப்பிரதேச மாநிலம் பலியாவில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த காணொலி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்தக் கொடுமை சோ ஹவ் மண்டலத்திலுள்ள பிப்ரா கலா  ஆரம்பப்  பள்ளியில்  நிகழ்ந்து ள்ளது.  கழிவறையை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் உங்களை வைத்து பூட்டிவிடுவேன் என ஒருவர் கூறும் குரலும்பதிவாகியுள்ளது. இந்த காணொலிக் காட்சி புதன்கிழமை வெளியானதாகக் கூறியுள்ள தொடக்கக் கல்வி அலுவலர் மணிராம் சிங், விசாரணை நடைபெற்றுவருவதாகக் கூறியுள்ளார்.

;