ஆந்திராவில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயதை 60லிருந்து 62ஆக உயர்த்த அமைச்சரவை முடிவு செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அம்மாநில ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிசந்தன் ஆந்திர பொது வேலைவாய்ப்பு குறித்த அவசரச் சட்டத்தை வெளியிட்டார். அதன்படி முதல் இந்தச் சட்டத்திருத்தம் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த ஊழியர்களின் அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தவும், மேம்பட்ட சுகாதார நிலைமைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.