அருணாசலப்பிரதேச தலைநகர் இட்டாநகரில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 வீடுகள் எரிந்து நாசமாயின.
அருணாச்சல பிரதேச தலைநகர் இட்டாநகரில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் நேற்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது திடீரென மரக்கூரைகளில் தீப்பிடித்து வீடுகளின் மேல் பரவத் தொடங்கியுள்ளது. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். ஆனாலும் தீயணைப்பு துறையினர் வருவதற்கு முன்னதாகவே தகர கூரைகளால் ஆன 12 வீடுகள் எரிந்து நாசமாயின. தீ விபத்தின் போது வீடுகளில் இருந்த கேஸ் சிலிண்டர்களும் அடுத்தடுத்து வெடித்தன. ஆனாலும் இந்த தீ விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.