politics

img

மு.க.ஸ்டாலினுடன் சிபிஎம் தலைவர்கள் சந்திப்பு

சென்னை,மே 23-சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வியாழனன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராசன் ஆகியோர் சந்தித்தனர்.பின்னர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பணபலம், அதிகார பலத்தை தாண்டி வெற்றிபெற்றுள்ளது. இதில் திமுக தலைவர்  மு.க.ஸ்டாலினின் பங்கு முக்கியமானது. அனைத்துக்கட்சியினரை ஒருங்கிணைத்து கூட்டணி அமைத்தார். பிற மாநிலங்களிலும் இதேபோல கூட்டணி அமைக்கப்பட்டிருந்தால் பாஜகவின் வெற்றியை தடுத்திருக்க முடியும். தமிழ்நாட்டில் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்.அதிமுக,பாஜக அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து மதச்சார்பற்ற கூட்டணி தொடர்ந்து போராட்டங்களை நடத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.

;