politics

img

ஒரு லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்கள் தபால் ஓட்டுபோடவில்லை

சென்னை,மே 12 -ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்னும் தபால் ஓட்டு போடவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.தமிழ்நாட்டில் 3 லட்சத்து 75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தேர்தலில் ஓட்டு போடுவதற்காக தபால் ஓட்டு போடும் வசதி உள்ளது. துறை அதிகாரியிடம் கையெழுத்து பெற்று தபாலில் வாக்களிக்க வேண்டும்.நாடாளுமன்றத் தேர்தலில் 1 லட்சம் போலீசார் தபால் ஓட்டு களை பதிவு செய்துள்ளனர். ஆனால் 2 லட்சத்து 75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப் பட்ட தபால் ஓட்டுகளில் 1 லட்சத்து75 ஆயிரம் ஓட்டுகள்தான் பதிவாகி யுள்ளன. இன்னும் 1 லட்சம் தபால் ஓட்டுகள் வர வேண்டும். ஆனால் அரசு ஊழி யர்கள்- ஆசிரியர்கள் இன்னும் ஓட்டு போடாமல் உள்ளனர். வாக்குச் சீட்டு களை வாங்கி வைத்திருந்தாலும் அரசு ஊழியர்கள் இன்னும் தபாலில் அனுப்பாமல் உள்ளனர். இவர்களுக்கு மே 23 ஆம் தேதி காலை 8 மணி வரைஓட்டு போட கால அவகாசம் உள்ளது. இதுகுறித்து உதவி தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், சில ஊழியர்கள் வாக்குச் சாவடியில் பணியாற்றாமல் பறக்கும் படையில் இடம்பெற்றிருப்பார்கள். இவர்கள் ‘பூத்’ துக்கு செல்ல முடியாததால் தபால் மூலம் தான் வாக்களிக்க இயலும். அவர்களுக்கு விதிமுறைகளை எடுத்து சொல்லியுள்ளோம். ஆனாலும் சிலர் வாக்களிக்க முன் வராமல் இருப்பது அவர்களது மனநிலையை பொருத்த முடிவாகும். தபால் ஓட்டுகளை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியாக துணை ஆட்சியர் மேற்பார்வையில் தாசில்தார் நியமிக்கப்பட்டுள்ளனர்.தபால் ஓட்டுகளை தவறாமல் பதிவு செய்யுங்கள் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வந்தாலும் ஒவ்வொரு அரசு ஊழியர்களும் வாக்களித்தார்களா? என்பதை கண்டறிய தேவையான முயற்சி எடுக்காதது உண்மைதான்.ஒவ்வொரு ஆட்சியர் அலுவல கத்துக்கும் தினமும் தபால் ஓட்டு வந்து கொண்டிருக்கிறது. 23 ஆம் தேதிதான் எவ்வளவு தபால் ஓட்டுகள் வந்துள்ளது. எத்தனை பேர் ஓட்டு போடவில்லை என்பது முழுமையாக தெரிய வரும் என்று தெரிவித்தார்.

;