politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

இந்தியா டுடே இதழ் நடத்திய கருத்தரங்கில் சீத்தாராம் யெச்சூரி பேசியது:

மேற்கு வங்கத்தில் நீங்கள் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் ஒரு நம்பகத்தன்மையுள்ள அரசியல் மாற்றை மக்கள் முன் வைக்க வேண்டும். அதன் பொருள் என்னவென்றால் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராகவும் ஒரு மாற்று தேவைஎன்பதாகும். ஏனெனில் மக்கள் விரோத நடவடிக்கைகள் காரணமாக கடுமையாக அதிருப்தி ஈட்டியுள்ள திரிணாமுல், பாஜகவுக்கு மாற்றாக இருக்க இயலாது. 

                                              ************************

மேற்குவங்கத்தில் இடதுசாரிகளுக்கு என்ன மிஞ்சி உள்ளது என்று என்னிடம் கேள்வி எழுப்பினர்.

எதிர்காலம் என்று பதில் கூறினேன்.

மேற்கு வங்க மக்கள் குறிப்பாக இளைய சமுதாயம் வாழ்க்கை முன்னேற்றத்துக்கானதெளிவான திட்டமும் அமைதி சூழலும் தேவை என கருதுகின்றனர். அதனை இடதுசாரி மாற்று அரசியல் மட்டும்தான் தர முடியும்.

                                              ************************

செய்தி: 2016-19 ஆண்டுகளில் “உபா” ( UAPA) சட்டத்தின் கீழ் 5922 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் 132 பேர்தான் தண்டிக்கப்பட்டனர். 2019 ஆம் ஆண்டு மட்டும் தேச துரோக சட்டத்தின் கீழ் 96 பேர் கைது செய்யப் பட்டனர்.

யெச்சூரி:  மக்களை எந்த அளவுக்கு துன்புறுத்துகின்றனர் என்பதை இந்த விவரங்கள்வெளிப்படுத்துகின்றன. மனித உரிமைகள்/குடிமை/உரிமைகள்/அரசியல் சட்ட உத்தரவாதங்கள் அனைத்தையும் சிதைப்பதன் மூலம் அமைதியான எதிர்ப்பு இயக்கங்களையும் மாற்றுக்கருத்துக்களையும் அடக்குவதற்கு இந்த சட்டங்கள் பாய்கின்றன.

'தோழர் சீத்தாராம் யெச்சூரி  அவர்களின் கூடுதல் கருத்துக்களை காண கீழ் காணும் லிங்க்-கை கிளிக் செய்யவும்....

முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர் : https://twitter.com/SitaramYechury

;