கோவை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கோவை, ஆக. 3 – கொக்கோ கோலா குளிர்பான பாட்டிலில் பாலிதீன் தாள் இருந்த தாக கோவை நுகர்வோர் நீதிமன் றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கொக்கோ கோலா நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித் ததுடன், அந்த பகுதியில் உள்ள 100 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தேவையான சத்தான பொருட்கள் வழங்க அதிரடி உத்தரவு பிறப்பித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. கோவை சிஎம்சி காலனியை சேர்ந்த பூர்ணிமா என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அதே பகுதியில் உள்ள மளிகை கடையில் 200 மில்லி கொள்ளளவு கொண்ட கொக்கோ கோலாவை ரூ.12க்கு வாங்கி உள் ளார். அவர் வாங்கிய கொக்கோ கோலா குளிர்பான பாட்டிலில் பாலித்தீன் தாள் இருந்ததையடுத்து மளிகை கடைக்கு சென்று விளக்கம் கேட்டுள்ளார். இதற்கு கடைக்காரர் கொக்கோ கோலா நிறுவனத்தில் போய் கேட்டு கொள்ளுங்கள் என அலட்சியமாக தெரிவித்துள்ளார்.
இதனால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் பூர்ணிமா வழக்கு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து ஐந்து வரு டம் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் வெள் ளியன்று இதற்கான தீர்ப்பை கோவை நுகர்வோர் நீதிமன்றம் வழங்கியது. இதில் தரமற்ற வகை யில் குளிர்பானம் தயாரித்த கொக்க கோலா நிறுவனத்திற்கு ரூ.75 ஆயி ரம், பரிசோதனை செய்யாமல் நுகர் வோரிடம் விற்பனை செய்த மளிகை கடைக்காரரான ஜவகர்ராஜுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் வழக்கு செல விற்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண் டும் என தீர்ப்பளித்தது. மனுதாரர் கோரிக்கைப்படி அபராத தொகையை அந்த பகுதி யில் உள்ள 100 ஆதரவற்ற மற்றும் ஏழை, எளிய குழந்தைகளுக்கு பழங்கள் மற்றும் சத்து பொருட்க ளாக கொக்கோ கோலா நிறுவனம் ஒரு மாதம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு தீர்ப்பளித்தது.