ராஜஸ்தானில் பெண் ஒருவரை இருசக்கர வாகனத்தில் கட்டி தரதரவென்ற இழுத்துச்சென்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், நஹவூர் மாவட்டம் நரசிங்கபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேமராம்(32). இவர் மதுபோதைக்கு அடிமையானவர். மதுபோதையில் அடிக்கடி தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மதுபோதையில் இருந்த பிரேமராம் தனது மனைவியை தாக்கியது மட்டுமில்லாமல், மனைவியின் கைகளை தனது இருசக்கர வாகனத்தில் கட்டி தரதரவென சாலையில் இழுத்துச்சென்றுள்ளார். இந்த சம்பவம் கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.
இந்த வைரல் வீடியோவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரேமராமை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட பெண் தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.