india

img

நெருப்பில் சிக்கிய குழந்தையை காப்பாற்றிய காவலர்: சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு

ராஜஸ்தானில் தீப்பிடித்த வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட குழந்தையை மீட்ட காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ராஜஸ்தான், கராவ்லி பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது மர்ம நபர்கள் சிலர் அப்பகுதியிலிருந்த சில வீடுகள் மற்றும் கடைகளுக்கு தீ வைத்துள்ளனர். அப்போது தீயில் எரிந்த கொண்டிருந்த ஒரு வீட்டிற்குள் குழந்தை ஒன்று சிக்கிக் கொண்டிருந்துள்ளது. 

இதனைக் கண்ட காவலர் நேத்ரேஷ் துணிச்சலுடன் அந்த வீட்டிற்குள் சென்று குழந்தையை பத்திரமாக மீட்டார். தீயில் சிக்கிய மேலும் நான்கு பேரையும் அவர் மீட்டார். இந்நிலையில் நேத்ரேஷ் குழந்தையை தீயிலிருந்து மீட்டு வெளியே கொண்டு வந்த புகைப்படம் ஒன்று சமூக வலைத் தளத்தில் வெளியாகி வைரலான நிலையில், நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

 

;