india

img

மும்பையில் கொரோனா பாதிப்பு குறைகிறது....

மும்பை:
நாட்டில் கொரோனா பாதிப்பில்  மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தலைநகர் மும்பையில் கொரோனா தொற்றுஉச்சத்தில் இருந்தது. மும்பையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது.இதைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. 

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக  பாதிப்புக்குஉள்ளாகும் மக்களது எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.கடந்த வியாழன்று 7 ஆயிரத்து 400 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 888-ஆக  இருந்தது.ஒரு நாளில் சராசரியாக 40 ஆயிரம் பேருக்கு வைரஸ் பரிசோதனை செய்யப்படுகிறது. தற்போது பரிசோதனை எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் குறைந்துள்ளது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.

;