india

img

தணிக்கைத் துறைக்கு வலுக்கும் கண்டனம்

சந்தீப் ரெட்டி இயக்கத்தில் ரன்  பீர் கபூர், ராஷ்மிகா நடிப்பில்  கடந்த வாரம் “அனிமல்” திரைப்  படம் வெளியானது. அளவுக்கு அதி கமான வன்முறைக் காட்சிகள், வன்  முறை வசனங்கள் இருப்பதால் “அனிமல்” திரைப்படத்திற்கு கடும்  எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், “அனிமல்” படத்திற்கு சான்றிதழ் அளித்த தணிக்கைக் குழுவும், அவர்களின் பொறுப்பும் எங்கே சென்றுவிட்டது? என பிரபல ஒளிப்  பதிவாளர் சித்தார்த்தா நுனி கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறு கையில்,”நான் வியாழனன்று “அனிமல்” படத்தைப் பார்த்தேன். மார்பில் ஸ்வஸ்திகா குறியீட்டுடன் ஹிட்லரின் நாஜியைப் பெருமைப்  படுத்துகிறது. “ஆல்பா மேல்” என்று ஆணாதிக்கத்தை நியாயப் படுத்துவது, சட்டத்துக்கு எதிரான வன்முறைகள், திருமணம் என்ற  பெயரில் நடக்கும் பாலியல் வன் முறை, தவறான உறவுமுறைகள் எனப் பல விஷமக் கருத்துகள் இப்படத்தில் இருக்கின்றன. 

மிருகத்தனத்துடன் நடந்து கொள்ளும் கணவனிடம், பெண் ஒருவர் அமைதியாக எதுவும் பேசா மல் இருப்பதுபோல் படமாக்கி இருப்பது அபத்தமானது. அதுவும்  படத்தின் இறுதிக் காட்சியில் ரன்பீர்  கபூரை ஆபாசமான செய்கைகளு டன் காட்சிப்படுத்தியிருப்பது பார்வையாளர்களின் மனதை புண்படுத்தும் செயலாக உள்ளது.  அதிக வசூல் பெற்றிருப்பதாக சொல் லப்படும் இந்தப் படம் நம்  சமூகத்தின் மனநிலையைப் பிரதி பலிக்கிறதா?” என மேலும் கேள்வி  எழுப்பி கண்டனம் தெரிவித்துள் ளார்.

ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனியைப் போல பல்வேறு தரப்பி னரும், “அனிமல்” சான்றிதழ் வழங்  கியது தொடர்பாக தணிக்கைத் துறைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “அனிமல்” திரைப்  படத்திற்கு கண்டனங்கள் குவிந்தா லும் இதுவரை 700 கோடி ரூபாய்க்கு  மேல் வசூலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.