india

மாலத்தீவு அமைச்சரைச் சந்தித்த ஜெய்சங்கர்

புதுதில்லி, ஜன. 19 - பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட லட்சத்தீவு பயண புகைப்படங்கள் தொடர் பாக மாலத்தீவு அரசாங்கத்தின் மூன்று துணை அமைச்சர்கள் சமூக ஊடகங் களில் வெளியிட்ட அவதூறான கருத்துக் களைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையே பிரச்சனை எழுந்தது. பிரதமர் மோடியை விமர்சித்த அமைச்சர்களை மாலத்தீவு ஜனாதிபதி முக மது முய்ஸு இடைநீக்கம் செய்த அதே நேரத்தில் மாலத்தீவிலிருக்கும் இந்திய ராணுவ வீரர்களை மார்ச் 15-க்குள் இந்தியா திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவித்தார்.

இது இந்தியா - மாலத்தீவு உறவில் பதற்றத் தை ஏற்படுத்தியது. இந்நிலையில், உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நடைபெற்ற அணிசேரா இயக்கத்தின் (NAM) அமைச்சர்கள் கூட்ட த்தில், மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீரை, இந்திய வெளியுறவு அமை ச்சர் எஸ். ஜெய்சங்கர்,  வியாழக்கிழமை சந்தித்துப் பேசியுள்ளார். “மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீரை இன்று கம்பாலாவில் சந்தித் தேன். இந்தியா - மாலத்தீவு உறவுகள் பற்றிய வெளிப்படையான உரையாடல் நடந்தது.

அணிசேரா இயக்கம் தொடர் பான பிரச்சனைகள் குறித்தும் விவாதிக் கப்பட்டது” என்று ஜமீருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதேபோல, மாலத்தீவு அமைச்சர் ஜமீரும், “ஒத்துழைப்பை மேலும் வலுப் படுத்தவும் விரிவுபடுத்தவும் இந்தியாவும் மாலத்தீவுகளும் உறுதிபூண்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இந்திய ராணுவ வீரர்களை திரும்பப் பெறுவது குறித்தும், மாலத்தீவில் நடந்து வரும் வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்தும், சார்க் மற்றும் அணிசேரா இயக்கத்துக்குள் ஒத்துழைப்பது குறித்தும் நடந்து வரும் உயர்மட்ட விவாதங்கள் குறித்து நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம்” என்றும் தெரிவித்துள்ளார்.