india

img

விடுதலைச் சிறுத்தைகளுக்கு பானைச் சின்னத்தை ஒதுக்குக!

புதுதில்லி,, பிப்.20- மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு, பொதுச் சின்ன மாக பானைச் சின்னத்தை ஒதுக்க வேண்டு மென அக்கட்சியின் தலைவர் தொல். திரு மாவளவன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் அவர், “மக்களவைத் தேர்த லில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலுங்  கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பா ளர்களை நிறுத்த உள்ளது. ஆகவே, சுயேட்சை சின்னமாக உள்ள பானை சின்  னத்தை பொதுச் சின்னமாக்கி, அதனை விடு தலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம். பானைச் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “குடியரசு முன்னாள் தலை வர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து, ‘ஒரே  நாடு, ஒரே தேர்தல்’ அதிபர் ஆட்சிக்கு முறைக்கு வழிவகுக்கும்; இந்திய ஜனநாய கத்திற்குப் புறம்பானது; அதனைக் கைவிட  வேண்டும்” என வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும் திருமாவள வன் கூறியுள்ளார்.