புதுதில்லி, மார்ச் 22- தில்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்தப் பணிகள் குறித்த கேள்வி ஒன்றுக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை யில் ஒன்றிய வீட்டு வசதித் துறை இணை யமைச்சர் கவுஷல் கிஷோர் எழுத்து மூலம் பதிலளித்தார். அதில், “தில்லியில் நடந்து வரும் புதிய நாடாளுமன்ற கட்டடப் பணிகள் 44 சத விகிதம் முடிந்து விட்டன. இதற்காக ரூ. 480 கோடி இதுவரை செலவிடப்பட்டு உள்ளது. புதிய நாடாளுமன்றம் உள்ளிட்ட மத்திய விஸ்டா திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.1,423 கோடி செலவிடப்படும். அடுத்த நிதியாண்டில் ரூ.2,285 கோடி செல விடப்படும்” எனத் தெரிவித்தார். விஜய் சவுக்கில் இருந்து இந்தியா கேட் வரையிலான பாதையை மேம்படுத்தும் பணிகள் 80 சதவிகிதம் முடிந்துவிட்டதாகக் கூறிய அமைச்சர் இதற்காக ரூ. 441 கோடி இதுவரை செலவிடப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டார். புதிய நாடாளுமன்ற கட்டடப் பணி களை வருகிற அக்டோபருக்குள் முடிப்ப தற்கு திட்டமிட்டுள்ள ஒன்றிய அரசு, இந்த ஆண்டின் குளிர்கால கூட்டத்தொடரை புதிய கட்டடத்தில் நடத்த திட்டமிட்டி ருப்பது குறிப்பிடத்தக்கது. புதிதாகக் கட்டப்படும் நாடாளு மன்ற கட்டடத்தில் மொழி பெயர்ப்பாளர் களுக்கான அறையே இல்லை என்று அண்மையில் சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து ஒன்றிய அரசு மவுனம் காத்தது. அதை உறுதி செய்யும் வகையிலேயே அமைச்சர் கவுஷல் கிஷோர் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் மொழிபெயர்ப் பாளர் அறை உள்ளதா? இல்லையா? என்பது பற்றி ஏதும் தெரிவிக்கப்படவில்லை.