india

மோடி அரசின் பொய்கள், பொய்கள், மேலும் பல பொய்கள் சிபிஐ(எம்) மத்தியக்குழு வெளியீடு 6

சொன்னது
“கிராமப்புறங்களில் மக்களின் வருமானம் அதிகரித்துள்ளது. மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதம்  திட்டத்திற்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.”
“கிராமப்புற தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பை அனுபவிக்கின்றனர். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் பொருளாதார பலன்களைப் பெறுவதில் சமபங்கை பெறுகின்றனர்.”
“உணவை உற்பத்தி செய்பவர்கள் - அன்னதாதாக்கள்  அதிகாரம் பெறுகின்றனர். விவசாயம் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்திட்டமும் சமூகப்பாதுகாப்பும் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளன.”
- மோடி அரசு இப்படி அடுக்கடுக்கான பொய்களை அள்ளிவிடுகிறது.

உண்மை நிலை என்ன?
l பாஜக அரசின் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் விவசாய நெருக்கடியை மேலும் ஆழமாக்கியுள்ளது. இதன் நேரடி விளைவாக இந்தியாவின் கிராமப்புறங்களில் வேலையின்மை அதிகரித்துள்ளது.தொழில்நுட்ப பயன்பாட்டின் விளைவாக உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் மிகவும் குறைவான அளவிற்கு சென்றுள்ளன.
l 2013-14 முதல் 2018 - 19 வரை விவசாயம் அல்லது விவசாயம் சாராத முக்கிய தொழில்களுக்கான ஊதியம் ஆண்டுக்கு 3 சதவீதம் குறைந்துள்ளது.
l பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது. (MGNREGA) 100 நாள் வேலைத்திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு வெட்டப்பட்டது. ஏப்ரல் - நவம்பர் (2022) க்கு இடையிலே பணவீக்கம் கணிசமாக உயர்ந்ததால் கிராமப்புற ஊதியங்களின் உண்மை நிலை வீழ்ச்சியடைந்தது. 
l பாஜக ஆளும் குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் உள்ள தொழிலாளர்கள் தேசிய சராசரியை விட மிக்க குறை
வான தினசரி ஊதியம் தான் பெறுகின்றனர் என இந்திய ரிசர்வ் வங்கி  ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. 
l குஜராத்தில் விவசாயத் தொழிலாளர்கள் தேசிய சராசரியான ரூ. 345.70 -ஐக் காட்டிலும் நூறுரூபாய் குறைவாக, ரூ.241.90 ஊதியம் தான் பெறுகின்றனர். மத்தியப் பிரதேசத்தில் மிகக் குறைந்த தினசரி ஊதியம் ரூ. 221.90. ஆனால் கேரளாவில் தினசரி ஊதியம் அதிகமாக உள்ளது. விவசாயத் தொழிலாளர்கள் ரூ.764.30-ம், கட்டுமானத் தொழிலாளர்கள் ரூ. 852.50-ம் பெறுகின்றனர். 
l மொத்த பட்ஜெட்டில் கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திற்கான ஒட்டுமொத்த ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. 2013-14-ல் 1.98 சதவீதம் என இருந்த ஒதுக்கீடு, 2023-24 -ம் ஆண்டில் 1.33 சதவீதமாக குறைந்துள்ளது. 
l கடந்த 21 மாதங்களில் 7.6 கோடி அட்டை தாரர்கள் இந்த திட்டத்தின் பயனாளிகள் பட்டியலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதாவது, வேலை இழந்துள்ளனர் என்று கல்வியாளர்கள், ஆர்வலர்களின் அமைப்பு ‘லிப்டெக்’ தரவுகளை வெளியிட்டுள்ளது. 
l    நடப்பு நிதிஆண்டின் 2023-24 ன் திருத்தப்பட்ட மதிப்பீடுகளுடன் ஒப்பிட்டால்
நிகர அதிகரிப்பு (பூஜ்ஜியமாக உள்ளது) எதுவும் இல்லை. இடைக்கால பட்ஜெட், நூறுநாள் வேலைத்திட்டத்திற்காக ரூ.86000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் மொத்தச்செலவு ரூ.88,309.72 கோடி ஆகும்.
l    மோடியின் ஆட்சியில் 2020-21-ல் (51.52 நாட்கள்) தொற்று நோய் ஆண்டைத்தவிர, மீதி வருடங்களில் இந்தத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் பெற்ற வேலை நாட்கள் 50ஐத் தாண்டவில்லை. திட்டத்தின் பெயர் நூறுநாட்கள் 
என்றாலும் ஒரு வருடத்தில் கூட 50 நாட்களுக்கு மேல் அவர்களுக்கு வேலை 
வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு சராசரி வேலைநாட்கள் 47 மட்டுமே. 2021-22-ல் ரூ.208-ம், 2022-23-ல் ரூ. 216.57-ம் சராசரி ஊதியமாக அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஊரக வளர்ச்சிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைக்கு இது எதிரானது. 
l தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகத்தின் (NCRB)ன் தரவுகளின் படி கடந்த ஆண்டு மட்டும் 5563 விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து 
கொண்டுள்ளனர். 2014 முதல் ஒட்டுமொத்தமாக 40,685 விவசாயத் தொழி
லாளர்கள் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 
l    நிலமற்ற தொழிலாளர்கள் மற்றும் பல பிரிவு கிராமப்புற ஏழை மக்கள் பல ஆண்டுகளாக நிலத்துக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு அது ஒன்றே மிக முக்கியமான வாழ்வாதாரம். அந்த நிலம் இப்போது பாஜக அரசாங்கத்தால் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. 
l 41 சதவீத கிராமப்புற குடும்பங்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை என்பதை 2018-19 -ம் ஆண்டின் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் (NSSO) கணக்கெடுப்பின் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. கிராமப்புறங்களில் விரல்விட்டு 
எண்ணக்கூடிய ஒரு சிலரிடம் நிலங்கள் குவிந்துள்ளன என்பதே உண்மை. அத்தகைய நிலவகைகளின் 76 சதமானம் 20 சதவீதமாக உள்ள உயர் அடுக்கின்
வசமே உள்ளது.
l வளர்ச்சித் திட்டங்கள் எனும் பெயரில் பல்வேறு நோக்கங்களுக்காக நிலங்களை
தொகுப்பாக அரசு மாற்றுகிறது. இதனால் அதிகம் பயன்பெறுபவர்கள் கார்ப்பரேட்டுகளே. சிறு, குறு விவசாயிகளை இது இடம் பெயரச்செய்கிறது. 
l பாஜக அரசு அதிகாரம் வழங்கும் ‘அன்னதாதாக்களில்’ விவசாயத் தொழி லாளர்கள் ஒருவர் கூட இல்லை. மிகவும் பிரச்சாரம் செய்யப்பட்ட பிஎம் - கிசான்
திட்டம் விவசாயிகளுக்கு எவ்வித பயனையும் அளிப்பதில்லை. அரசாங்கத்திட மிருந்தும் அவர்கள் எவ்வித உதவியையும் பெறுவதில்லை.
l பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் அற்பமான பலன்கள் கூட பங்குதாரர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. கடன் மற்றும் கடன் வழங்கும் அமைப்பாலும் எவ்வித பலுனும் இல்லை. விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கு சமூக ஓய்வூதியம் வழங்குவதற்கு கேரள மாநிலத்தைத்தவிர ஒன்றிய அரசிடமோ வேறு எந்த மாநில அரசிடமோ குறிப்பிடத்தக்க திட்டம் எதுவுமில்லை. கேரள மாநில விவசாய தொழிலாளர் நல நிதிவாரியம் அனைத்து பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியத்தை உறுதிசெய்கிறது. 
l 2019-ல் தொடங்கப்பட்ட பிரதான் மத்திரி ஷ்ரம் யோகிமான் - தன் (PM-STM) ஓய்வூதியத்திட்டம் என்ற பெயரில் மோடி அரசு வெற்று பரபரப்பையே உண்டாக்கியது. இதன்கீழ் விவசாயத் தொழிலாளர் உள்ளிட்ட அமைப்பு சாரா துறைகளைச்சேர்ந்த தொழிலாளர் அனைவரும் மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் பெறும் ஏற்பாடு உள்ளது. (60 வயதை அடைந்த பிறகு). இந்தத்திட்டத்தின்
கீழ் பயனாளிகள் 50 சதவீத பங்களிப்பை செலுத்திட வேண்டும். இதுவரை 49,25,155 பேர் மட்டுமே பயனாளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். வயது வரம்பின் காரணமாக இதுவரை ஒருவர் கூட எந்த பலனையும் பெறவில்லை.
l தொற்றுநோய் காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சார்பாக உச்சநீதி மன்றம் தலையிட்டதால் ஒன்றிய அரசு ஆகஸ்ட் 2021-ல் இ -ஷ்ரம் போர்ட்டலை தொடங்கியது. அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசியதரவுத் தளத்தை உருவாக்கும் நோக்கம் இருந்தாலும் அதனால் ஏற்படும் சமூக நலன்கள் 
எதையும் குறிப்பிடவில்லை. 

கார்ப்பரேட் ஊடகங்கள் ஒன்றிய அரசின் சாதனை என வெறும் பரபரப்பை மட்டுமே ஏற்படுத்தின. ஆனால் ஒரு தொழிலாளி கூட உண்மையில் எவ்வித பலனையும் அடையவில்லை.
விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்போம்! பாஜகவைத் தோற்கடிப்போம்!

தமிழில்: கடலூர் சுகுமாரன்