புதுதில்லி, பிப். 1 - காவிரி நதிநீர் மேலாண்மை ஆணை யத்தின் 28-ஆவது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் பிப்ரவரி மாதத்தி ற்கு 2.5 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
முன்னதாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்ட நிகழ்ச்சி நிரலில் குறிப்பி ட்டிருந்தபடி காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணைகட்டுவது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு வலியுறுத்தியது.
ஆனால் மேகதாது வழக்கு உச்சநீதிமன்றத் தில் நிலுவையில் இருப்பதால் இதுதொடர் பாக விவாதிக்க கூடாது என தமிழ்நாடு அரசு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 2 மாநில அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.