india

img

நீதிதேவதை சிலையில் மாற்றம் - உச்சநீதிமன்ற பார் அசோசியேசன் கண்டனம்

நீதிதேவதை சிலையில் மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (SCBA) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 
கடந்த வாரம், உச்சநீதிமன்ற நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலையை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் திறந்து வைத்தார். அந்த புதிய சிலையானது, திறந்த கண்களுடன், நெற்றியில் திலகம், கழுத்து முழுவதும் நகைகள் மற்றும் கையில் அரசியல் சாசனப் புத்தகத்தை ஏந்தியபடி இருந்தது. பழைய நீதி தேவதையின் சிலையில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் எந்த பாரபட்சமும் பார்க்கக்கூடாது என்பதை சுட்டிக்காட்ட நீதி தேவதையின் கண்கள் மூடப்பட்டு, அநீதியைத் தண்டிப்பதற்காகக் கையில் வாளுடன் இருக்கும்.
இந்த நிலையில், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்துடன் கலந்தாலோசிக்காமல், நீதிதேவதையின் சிலையில் மாற்றம் செய்து திறந்துவைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வழக்கறிஞர்களுக்கென கஃபே அமைக்க கோரிய இடத்தில் அருங்காட்சியகம் கொண்டுவரும் முடிவுக்கு எதிராகவும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (SCBA) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.