india

img

இந்தியாவின் புதிய கடற்படை தளபதியாக ஹரிகுமார் பதவியேற்பு  

இந்தியாவின் புதிய கடற்படை தளபதியாக ஹரிகுமார் பதவியேற்றார்.  

புதுதில்லி - கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் கரம்பீர் சிங் பதவிக்காலம் முடிவுறுவதை அடுத்து துணை அட்மிரல் ஹரிகுமார் புதிய தளபதியாக நியமனம் செய்யப்பட்டார். தில்லியில் உள்ள தெற்கு பிளாக்கில் நடந்த விழாவில் இந்திய கடற்படையின் புதிய தளபதியாக ஹரிகுமார் பொறுப்பேற்றார். அவரை கடற்படை அதிகாரிகள் வரவேற்றனர். அதனை தொடர்ந்து வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

இந்த விழாவில் அவர், “இது எனக்கு பெருமை தரும் பதவியாகும். எனது முன்னாள் அதிகாரிகளின் நடவடிக்கைகளை பின்பற்றி மேலும் சிறப்பாக பணியாற்றுவேன்” என்றார். மேலும் இவர் கடற்படையில் 38 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

;