இந்தியாவில் மார்ச் 27 ஆம் தேதி முதல் சர்வதேச விமான சேவை தொடங்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று காரணமாக சர்வதேச விமான போக்குவரத்திற்காக தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் சர்வதேச விமான சேவையை மீண்டும் ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது. அந்த வகையில் வருகிற மார்ச் 27 ஆம் தேதி முதல் சர்வதேச விமான சேவை தொடங்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.