india

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஜன. 26  கிராம சபை கூட்டம்

சென்னை,ஜன.12- ஜனவரி 26 குடியரசு தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவு பிறப்பித் துள்ளது. கிராம சபை கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்த ஒரு வளாகத்திலும் நடத்தக்கூடாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

கிராம சபை கூட்ட நிகழ்வுகளை நம்ம கிராம சபை  செயலியில் உள்ளீடு செய்ய அறிவுறுத் தல் வழங்கப்பட்டுள்ளது. கிராம சபை கூட்டத்திற்கான செலவின வரம்பை ரூ.5,000ஆக உயர்த்த தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

முதுகலை மருத்துவர்களுக்கு அரசு விதிகளில் தளர்வு
சென்னை,ஜன.12- முதுகலை மருத்துவப் படிப்பு முடித்த  பிறகு, 2 ஆண்டு காலம் அரசு மருத்து வமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட்டுள்ளது. மருத்துவம் இளநிலை படித்து  முடிக்கும் பெரும்பாலான மாணவர் கள் தங்கள் ஒரு வருட கட்டாய பயிற்சிக் குப் பிறகு முதுகலை படிக்க விரும்பு கின்றனர்.

அந்த வகையில் முதுகலை யில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு விதிமுறைகள் வகுக்கப் பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், முதுகலை மருத்துவர்கள் படிப்பை முடித்த பிறகு இரண்டு ஆண்டு காலம்  அரசு மருத்துவமனைகளில் பணி யாற்ற வேண்டும் என்ற விதி தளர்த்தப் பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள் ளது. மேலும் முதுகலை படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் பணி யாற்ற விருப்பம் இல்லாதவர்கள் ரூ. 40 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என்ற  விதியை மாற்றி, ரூ. 20 லட்சம் கட்டினால்  போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரண்டு ஆண்டுகள் என்பதை ஓர் ஆண்டாக குறைத்து மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

பாலியல் தொல்லை: முன்னாள் டிஜிபி  மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
 

விழுப்புரம்,ஜன.12- பாலியல் தொல்லை வழக்கில், முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணை ஜனவரி 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வழங்கிய  தீர்ப்பை எதிர்த்து, முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி  ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறை யீட்டு மனு மீதான விசாரணையை ஜனவரி 18 - க்கு ஒத்திவைத்து விழுப்புரம் முதன்மை மாவட்ட  நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தர விட்டது.

மேலும், அன்றைய தினம் ஓய்வு  பெற்ற சிறப்பு டிஜிபி தரப்பில் வாதிடுவ தற்கு அனுமதி அளித்தும் மாவட்ட நீதிபதி ஆர். பூர்ணிமா உத்தரவிட்டார்.