india

img

வங்கதேசத்தில் சிறுபான்மையினர் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திடுக: சிபிஎம் கோரிக்கை

வங்க தேசத்தில் சிறுபான்மையினர் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திட, வங்க தேச இடைக்கால அரசாங்கமும், இந்திய ஒன்றிய அரசாங்கமும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

ஷேக் ஹசீனா அரசாங்கம் வீழ்ந்ததைத் தொடர்ந்து வங்க தேசத்தில் சிறுபான்மையினர் மற்றும் இந்து கோவில்கள் மீதும் பல தாக்குதல்கள் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகியிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தன் ஆழ்ந்த கவலைகளை வெளிப்படுத்திக் கொள்கிறது. அரசாங்கம் வீழ்ந்ததைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு  மத அடிப்படைவாத சக்திகள் சிறுபான்மையினரைக் குறிவைத்துத் தாக்குவது தெளிவாகத் தெரிகிறது.

வங்க தேசத்தில் அமைந்துள்ள இடைக்கால அரசாங்கம் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திட உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திட வேண்டும். ஒன்றிய அரசாங்கமும் வங்க தேசத்தில் இது தொடர்பாக அதிகாரிகளுடன் பேசிட வேண்டும்.அரசியல் தலைமைக்குழு இவ்வாறு அறிக்கையில் கோரியுள்ளது.