அதிதீவிர காலநிலை மாற்றத்தால் உலகளவில் பன்னிரண்டில் ஒரு மருத்துவமனை இழுத்து மூடப்படும் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. புதை படிவ எரிபொருட்களின் பயன்பாடு தவிர்க்கப்படா விட்டால் 2100இல் 16,245 மருத்துவமனைகள் இழுத்து மூடப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இப்போதே இந்த எண்ணிக்கையில் பாதி மருத்துவமனைகள் மூடப்படும் நிலையில் உள்ளன என்று கிராஸ் டிபெண்டன்சி (Cross Dependency Initiative (XDI) என்ற காலநிலை மற்றும் ஆரோக்கியம் பற்றி ஆய்வு நடத்தும் அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கை கூறுகிறது.
துபாய் காப்28 மாநாட்டில் முதல்முறையாக நோய்ப்பரவல், மிக மோசமான காலநிலையால் ஏற்படும் பாதிப்புகள் உட்பட ஆரோக்கியம் பற்றி பேச்சுவார்த்தைகள் நடப்பதையொட்டி இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. காலநிலை மாற்றம் உலக மக்கள் அனைவரின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. அது மோசமாகும்போது மருத்துவமனைகள் எவ்வாறு செயல்படமுடியும்? அவை மூடப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.
புதைபடிவ எரிபொருட்கள் படிப்படியாகக் குறைக்கப்படாவிட்டால் ஆயிரக்கணக்கான மருத்துவ மனைகள் தீவிர நிகழ்வுகளின்போது சேவைகளை வழங்கமுடியாமல் போகும். ஒரு சில மருத்துவமனை கள் கடும் புயல், வெள்ளப்பெருக்கு, காட்டுத்தீ போன்ற பேரிடர்களுக்கு ஏற்ப தங்களை மேம்படுத்திக் கொண்டா லும் பெரும்பாலான மற்ற மருத்துவமனைகள் பெரும் பொருட்செலவில் வேறிடங்களுக்கு இடம்பெயர வேண்டியிருக்கும் என்று எக்ஸ் டி ஐ அமைப்பின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் இயக்குநர் டாக்டர் கார்ல் மலான் கூறுகிறார்.
ஏழை மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளையே இது அதிகம் பாதிக்கும்.
2100இல் அபாயத்தில் இருக்கும் 71சதவீத அல்லது 11,512 மருத்துவமனைகள் இந்த நாடுகளிலேயே அமைந்துள்ளன. தென்கிழக்கு ஆசியாவில் 2100இன் இறுதிக்குள் ஐந்தில் ஒரு அல்லது 18.4சதவீத மருத்துவ மனைகள் இதனால் அதிகம் பாதிக்கப்படவாய்ப்புள்ளது.
மருத்துவ உலகம் பாடுபட்டு இன்று வரை உருவாக்கி யுள்ள மகத்தான முன்னேற்றங்கள் இதனால் இல்லாமல் போகும் ஆபத்து உருவாகியுள்ளது. மருத்துவச்சேவைகளின் அடித்தளத்தையே காலநிலை மாற்றம் ஆட்டம் காணச்செய்கிறது என்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக நீடித்த நிலையான வளர்ச்சிக் கான மருத்துவப்பிரிவின் இயக்குநர் பேராசிரியர் நிக் வாட்ஸ் கூறுகிறார்.
நோய்ச்சுமையால் அவதிக்குள்ளாகுமா மனிதகுலம்?
மருத்துவமனைகள் மூடப்பட்டாலும் அல்லது கிளினிக்குகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பிவழிந்தாலும் சேவைகள் கிடைக்காமல் போய்விடும். நோய்களின் சுமையால் மனிதகுலம் அவதிக்குள்ளாகும். பாதிக்கப்பட வாய்ப்புள்ள மருத்துவமனைகளின் பெயர்கள் மற்றும் இட விவரங்களை ஆய்வமைப்பு வெளியிட்டுள்ளது. ஆட்சியாளர்கள் சரியான நேரத்தில் தகுந்த நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் அது அவர்களின் சொந்த குடிமக்களை அவர்கள் புறக்கணிப்பதற்கு ஒப்பானது.
உடல்நலம் பாதிக்கப்படும்போது மக்களுக்கு கடைசி அடைக்கலமாக இருப்பது மருத்துவமனை களே. அவசரநிலையின் போது அவை மூடப்பட்டால் பிறகு ஏழை மக்கள் எங்கு செல்வார்கள் என்று லண்டனில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வறிக்கை கவலை தெரிவிக்கிறது.
காலநிலை காரணமாக உலகளாவிய நிலையில் மருத்துவமனை கட்டமைப்புகளுக்கு ஏற்படப்போகும் இயற்பியல்ரீதியிலான பாதிப்புகள் பற்றிய அமைப்பின் ஆதரவில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. எக்ஸ் டி ஐ என்பது காலநிலை பாதிப்புகள் பற்றிய மதிப்பிடல் மற்றும் தகவல்களைப் பரிமாற ஆய்வுகளை நடத்தும் நிறுவனங்களின் ஒரு கூட்டமைப்பு. இது காலநிலை அவசரநிலை பகுப்பாய்வுகளில் நிபுணத்துவம் பெற்ற அமைப்பு ஆகும்.
இந்தியாவில் பத்தில் ஒன்று...
பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முத லிடத்தில் உள்ளது. மொத்தமுள்ள 16,245 மருத்துவ மனைகளில் 5,160 மருத்துவமனைகள் இந்தியாவில் மூடப்படும் நிலையில் உள்ளது. உலக மருத்துவ மனைகளில் 10 சதவிகித மருத்துவமனைகளை மாதிரி யாகக் கொண்டு மட்டுமே இந்த ஆய்வுகள் நடந்தன. 2050இல் இந்தியாவில் 5.7 சதவீத மருத்துவமனைகள் மூடப்படும். உமிழ்வு தொடர்ந்தால் 2100ல் இது பத்தில் ஒன்றாக உயரும்.
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் 57 சதவீத மருத்துவ மனைகள் ஆபத்தில் உள்ளன. லாவோஸ், பிலிப்பை ன்ஸ் மற்றும் நேபாளம் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. உலகளவில் 200,000 மருத்துவ மனைகள் இதற்காக ஆராயப்பட்டன. இந்த மருத்துவ மனைகள் வேறிடங்களுக்கு இடம்பெயர்வதே இதற்கு நிரந்தரத்தீர்வு என்று அறிக்கை கூறுகிறது. வெப்ப உயர்வு 1.8 டிகிரிக்கு கட்டுப்படுத்தப்படாவிட்டால் 2100இல் பாதிப்பு நான்கு மடங்காக அதிகரிக்கும். உமிழ்வு குறைந்தால் இது 106சதவீதம் ஆகக் குறை யும். 2015 பாரிஸ் உடன்படிக்கை வெப்ப உயர்வை 1.5 டிகிரியாகக் குறைக்க வலியுறுத்தியது. ஆனால் நடை முறையில் 1.8 டிகிரி வெப்ப உயர்வை எதிர்பார்க்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். உமிழ்வு குறையா விட்டால் 2050இல் சிங்கப்பூரில் 3,357 மருத்துவ மனைகள் செயல்படமுடியாமல் போகும். 2100இல் இது 5,894 ஆக அதிகரிக்கும். காலநிலை மாற்றம் சங்கிலித்தொடர் வினை போலத் தொடர்கிறது.
உருவாகும் இடத்திலேயே உமிழ்வைக் குறைக்க புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதை மனிதன் உடனடியாக நிறுத்தவேண்டும் என்று உலகளவிலான அவசரநிலை சுகாதாரச் செயல்பாடுகளுக்கான வலையமைப்பின் (Pandemic Action Network) செயல் இயக்குநர் இலாய்ஸ்டாட் கூறுகிறார்.
இந்தியாவைப் பொறுத்தவரை காலநிலை விழிப்புணர்வு இன்னும் போதுமான அளவிற்கு ஏற்படவில்லை. இதிலும் குறிப்பாக சுகாதாரத்துறை யில் காலநிலை ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றி மிகக் குறைந்த விழிப்புணர்வே உள்ளது. இந்த நிலையில் புவி வெப்ப உயர்வை குறைக்க புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை மனிதன் குறைப்பதே இதற்கு நிரந்தரத் தீர்வு என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.