india

img

வெறுப்பு பிரச்சாரம் செய்த அசாம் முதல்வருக்கு நோட்டீஸ்!

சத்தீஸ்கர் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ அக்பர் குறித்தும், சிறுபான்மையினர் குறித்தும் வெறுப்பு பிரசாரம் செய்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சூழலில், சத்தீஸ்கர் மாநிலத்தின் கவர்தா தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா, "ஒரு அக்பர் ஒரு இடத்திற்கு வந்தால், அவர்கள் 100 அக்பர்களை அழைக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே, விரைவில் அவரை அனுப்பிவிடுங்கள். இல்லையெனில் மாதா கௌசல்யாவின் இந்த நிலம் மாசுபடும்" என்று பேசியுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ அக்பர் குறித்தும், சிறுபான்மையினர் குறித்தும் வெறுப்பு பிரசாரம் செய்தது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் அடிப்படையில் தற்போது, இது தொடர்பாக வரும் 30-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று ஹிமந்தா பிஸ்வாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.