india

img

தில்லி துணை முதலமைச்சர் ராஜினாமா

   தில்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் இருக்கும் மணீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். நேற்று அவசரகால வழக்காக விசாரிக்கப்பட்ட ஜாமின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில் தற்போது அவர் தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரோடு சேர்ந்து தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ராஜினாமா செய்துள்ளார் .இருவரின் பதவி விலகளையும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டுள்ளார்