india

img

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 3 ஆவது நபர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு, 3 ஆவதாக மும்பையை சேர்ந்த 64 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உலகம் முழுவதும் 130 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இந்த நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,79,334 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 7,121 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவி உள்ளது. இந்தியாவில் இதுவரை 131 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் 112 பேர் இந்தியர்கள், 18 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 40 பேரும், கேரளாவில் 26 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 12 பேரும், கர்நாடகத்தில் 10 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் பாதிப்புக்கு ஏற்கனவே கர்நாடகத்தில் ஒருவரும், தில்லியில் ஒருவரும் பலியான நிலையில், தற்போது மும்பையை சேர்ந்த 64 வயதுடைய முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
 

;