india

img

இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 4,092 போ் உயிரிழப்பு!

இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 4,092 போ் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4 லட்சத்து 03 ஆயிரத்து 738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,22,96,414 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புகளால் கடந்த 24 மணிநேரத்தில் 4,092 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை  2,42,362 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 3,86,444 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1,83,17,404 ஆக உயர்வடைந்துள்ளது. 37,36,648 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

;