india

img

நிலக்கரி சுரங்கம் முறைகேடு வழக்கு: முன்னாள் நிலக்கரித்துறை செயலாளருக்கு 3 ஆண்டு சிறை

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு வழக்கில் நிலக்கரித் துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சுரங்கங்களை ஏலம் விடாமல் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிலக்கரித் துறை முன்னாள் செயலாளர் எச்.சி. குப்தாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 1 லட்சம் அபராதமும், முன்னாள் இணை செயலாளர் கே.எஸ். குரோவாவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தின் இயக்குநர் முகேஷ் குப்தாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், 2 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
 

;