india

img

தில்லியில் கொடூரமாக கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய பிருந்தா காரத்!

தில்லியில் கொடூரமாக கொல்லப்பட்ட 16 வயது சிறுமியின் குடும்பத்தினரை சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தில்லியில் கடந்த 28-ஆம் தேதி இரவு, 16 வயது சிறுமி ஒருவரை ஷாஹில் என்ற இளைஞர் பலமுறை கத்தியால் குத்தியும், தலையில் கல்லைப் போட்டும் கொடூரமாக கொலை செய்தார். ஏராளமானவர்கள் அந்த இடத்தை கடந்து சென்றாலும் ஒருவரும் தலையிட்டு தடுக்கவில்லை. இந்நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஷாஹிலை போலீசார் கைது செய்தனர். 

இதைத் தொடர்ந்து, சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். சிபிஎம் தில்லி மாநிலச் செயலாளர் கே.எம்.திவாரி உடன் இருந்தார். மேலும் பெண்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று காவல்துறைக்கு பிருந்தா காரத் கோரிக்கை வைத்துள்ளார்.
 

;