புதுதில்லி, மார்ச் 1- தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பட்ஜெட் ஒதுக்கீட்டைக் குறைத்த மோடி அரசு, தற்போது கண்காணிப்பு மொபைல் செயலியை முற்றிலும் கட்டாயமாக்குவதன் மூலம் தேசிய ஊரக வேலையின் உயிர்நாடி மீதே கைவைக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தின் மூலம் கிராமப்புற பொருளாதாரம் மோச மடையாமல் இருப்பதாக பல்வேறு ஆய்வு கள் தெரிவித்து வரும் நிலையில், 2014-ஆம் ஆண்டு முதல் மோடி அரசு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்கும் நட வடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ் வொரு பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கீடு வெகு வாக குறைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஊரக வேலை திட்டத் திற்கு ரூ.89.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து இருந்த நிலையில், நடப்பாண்டில் சுமார் ரூ.29.4 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டு வெறும் ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் வேலை யில்லா திண்டாட்டம் பன்மடங்கு பெருகி யுள்ள நிலையில் தேசிய ஊரக வேலை நிதி குறைக்கப்பட்டு இருப்பது கடும் விமர்ச னத்துக்கு உள்ளானது. ஆனால் இதைப் பற்றி ஒன்றிய அரசு எதுவும் கண்டுகொள்ள வில்லை.
எங்களிடம் சாப்பிடவே பணம் இல்லை! |
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை அழிக்கும் நோக்கத்தில் இருக்கும் ஒன்றிய மோடி அரசின் செயல்பாடைக் கண்டித்து சங்கர்ஷ் மோர்ச்சா என்ற அமைப்பு தில்லி ஜந்தர் மந்தரில் 100 நாள் போராட்டத்தை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள நிலையில், என்எம்எம்எஸ் திட்டம் குறித்து முசாபர்பூரைச் சேர்ந்த தொழிலாளி சுதாமா தேவி கூறுகையில், “எங்களிடம் சாப்பிடவே பணம் இல்லை. போன் வாங்க வேண்டும் என்று ஒன்றிய ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். சில இடங்களில் ஜியோ சிம், சில இடங்களில் ஏர்டெல் சிம் வேலை செய்கின்றன. என்எம்எம்எஸ் திட்டத்திற்காக நாங்கள் (தொழிலாளர்கள்) எத்தனை சிம் கார்டுகள்தான் வாங்குவது” என அழும் குரலில் கூறியுள்ளார். “தொழில்நுட்பம் மூலம் ஒன்றிய அரசாங்கம் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை அழிக்க என்எம்எம்எஸ் செயலியை ஒரு சாக்காக பயன்படுத்துகிறது” என தேசிய ஊரக வேலை திட்ட செயல்பாட்டாளரும், கட்டிடக்கலைஞருமான அருணா ராய் கருத்து தெரிவித்துள்ளார். |
கண்காணிப்பு செயலி
பட்ஜெட் ஒதுக்கீடு தொகை வெட்டு மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், என்எம்எம்எஸ் என்ற மொபைல் கண்காணிப்பு செயலி என்ற திட்டத்தை கடு மையாக்கி தேசிய ஊரக வேலை உறுதித் திட் டத்தை அடியோடு ஒழிக்க ஒன்றிய மோடி அரசு திட்டம் தீட்டி வருகிறது. ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தால் கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட என்எம்எம்எஸ் (தேசிய மொபைல் கண்காணிப்பு (NMMS - National Mobile Monitoring Software)) என்ற மொபைல் செயலி மூலம் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியிடங்கள், பணிபுரி யும் தொழிலாளர்களின் வருகை நேரம் உள் ளிட்ட அனைத்து வேலைகளும் என்எம் எம்எஸ் செயலியில் பதிவாகும்படி கொண்டு வரப்பட்டது.
வெறும் 25.9%
என்எம்எம்எஸ் மொபைல் கண்காணிப்பு செயலி திட்டம் கட்டாயம் என மோடி அரசு அறிவித்து 55 நாட்கள் ஆகின்றன. நாட்டில் மொத்தமுள்ள 2,69,637 கிராம பஞ்சாயத்து களில் 1,58,390 இல் மட்டுமே இந்த செயலியின் பயன்பாடு உள்ளது. 41.3% கிராம பஞ்சாயத்து களில் இந்த செயலி பதிவேற்றமே செய்யப் படவில்லை. இதில் மிகவும் அதிர்ச்சி கலந்த விஷயம் என்னவென்றால் மொத்தமுள்ள 3,83,421 வருகைப் பதிவு கணினிகளில் வெறும் 99,687இல் மட்டுமே என்எம்எம்எஸ் செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அதாவது மொத்த கணினி எண்ணிக்கையில் வெறும் 25.9% மட்டுமே என்எம்எம்எஸ் செயலி மூலமான வருகைப் பதிவு பணி யைச் செய்கின்றன.
100 நாள் வேலைக்கு நூறு சிக்கலா..
தேசிய ஊரக வேலையில் திடமாக 100 நாட்கள் வேலை கிடைப்பதில்லை, வேலை பார்த்தாலும் சம்பளம் சரிவர வங்கிக் கணக் கில் வரவு வைப்பதில்லை. சுழற்சி முறையில் வேலை கிடைத்தாலும் குளறுபடியில் மிகப் பெரிய காத்திருப்புக்கு பின்னரே வேலை கிடைக்கும் என பல்வேறு சிக்கல்கள் நீடிக் கின்றன. இந்த பிரச்சனை குறித்து மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத் தாராம் யெச்சூரி தனது டுவிட்டர் பக்கத்தில், “வேலையில்லாத் திண்டாட்டம் ‘சாதனை’ அளவில் அதிகரித்து வரும் நிலையில், கிரா மப்புற மக்கள் உயிர்வாழ்வதற்கான ஒரே வழி தேசிய ஊரக வேலை திட்டம் மட்டும்தான். ஆனால். மோடி அரசு முதலில் பட்ஜெட் ஒதுக் கீட்டைக் குறைத்து, தற்போது மொபைல் கண் காணிப்பு செயலியைக் கட்டாயமாக்குவதன் மூலம் தேசிய ஊரக வேலை திட்டத்தின் உயிர்நாடியை நீக்கும் வேலைகளில் இறங்கி யுள்ளது. முக்கியமாக நாட்டில் உள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான கிராம பஞ்சாயத்து களில் 41.3%, மொபைல் செயலி பயன்பாடு இல்லாத நிலையில், கடும் பாதிப்பு ஏற்பட்டுள் ளது. மோடி அரசு நிதி ஒதுக்கீட்டை அதிக ரித்து, ஆண்டுக்கு 200 நாட்கள் வேலைக் கான உத்தரவாதத்தை அளிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.