தில்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 6 மாதங்களாக சிறையில் உள்ள ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்குக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
தில்லி மதுபான கொள்கை வழக்கில் தொடர்பு உள்ளதாகக் கூறி ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.யான சஞ்சய் சிங், கடந்த ஆண்டு அக்டோபர் 4-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் அவரது ஜாமீன் மனுவை தில்லி உயர்நீதிமன்றம் நிராகரித்த நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையில், இதுவரை ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யாமல், எந்த ஆதாரமும் இல்லாமல் சஞ்சய் சிங்கை தொடர்ந்து 6 மாதங்களாக சிறையில் அமலாக்கத்துறை வைத்திருந்தது ஏன் என்று உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு கேள்வி எழுப்பியது. இந்த நிலையில், சஞ்சய் சிங்குக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.