india

கொரோனாவின் 2-வது அலையில் 798 மருத்துவர்கள் பலி....

புதுதில்லி:
கொரோனா இரண்டாவது அலையில் 798 மருத்துவர்கள்  உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அதிகரித்த கொரோனா பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா முதல் அலையில் நாடு முழுவதும் 748 மருத்துவர்கள் பலியாகினர். இரண்டாவது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி, இதுவரை 798 மருத்துவர்கள் இறந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் கூறியுள்ளது. இதில் அதிகபட்சமாக தில்லியில் 128 பேர் உயிழந்துள்ளனர்.  பீகாரில் 115 மருத்துவர்களும், உத்தரப்பிரதேசத்தில் 79 மருத்துவர்களும் இறந்துள்ளனர். தமிழகத்தில் 51 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர். இதில் பெரும்பாலான மருத்துவர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.மூன்றாவது அலை ஏற்படும் என கணிக்கப்பட்டிருப்பதால் மருத்துவர்கள் உட்பட முன்களப் பணியாளர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

;